<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>Preciousdeepa's Weblog</title>
	<atom:link href="http://sreepa.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://sreepa.wordpress.com</link>
	<description>Just another WordPress.com weblog</description>
	<lastBuildDate>Thu, 31 Jan 2008 12:56:13 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='sreepa.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>Preciousdeepa's Weblog</title>
		<link>http://sreepa.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://sreepa.wordpress.com/osd.xml" title="Preciousdeepa&#039;s Weblog" />
	<atom:link rel='hub' href='http://sreepa.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>ஈராக் (கனவு தேசம் சிதைக்கப்பட்ட வரலாறு)</title>
		<link>http://sreepa.wordpress.com/2008/01/31/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://sreepa.wordpress.com/2008/01/31/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Thu, 31 Jan 2008 12:56:13 +0000</pubDate>
		<dc:creator>preciousdeepa</dc:creator>
				<category><![CDATA[Article]]></category>

		<guid isPermaLink="false">http://sreepa.wordpress.com/?p=14</guid>
		<description><![CDATA[ஏழாயிரம் ஆண்டுகால வரலாறைக் கொண்ட ஒரு நாடு; சுமேரியர், அக்கடியர், அசிரியர் போன்ற மன்னர்களின் ஆட்சியில் பல்வேறு வகையான முன்னேற்றங்களைக் கண்ட ஒரு நாடு; சிற்ப கட்டடக் கலைகளுக்கு சான்றாக விளங்கும் பாபிலோனிய தொங்கும் தோட்டம் முதல் முதன்முறையாக நிரந்தர ராணுவம் முதலிய அரசியல் வழிமுறைகளை செயல் படுத்திய ஒரு நாடு; சக்கரம், நீர்பாசனம், காலண்டர் உள்பட பல்வேறு பொருட்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நாடு, ஒரு அல்லது ஒருசில நாடுகளின் சுயநலத்தாலும், வர்த்தகம் முதலிய காரணங்களினாலும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=14&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஏழாயிரம் ஆண்டுகால வரலாறைக் கொண்ட ஒரு நாடு; சுமேரியர், அக்கடியர், அசிரியர் போன்ற மன்னர்களின் ஆட்சியில் பல்வேறு வகையான முன்னேற்றங்களைக் கண்ட ஒரு நாடு; சிற்ப கட்டடக் கலைகளுக்கு சான்றாக விளங்கும் பாபிலோனிய தொங்கும் தோட்டம் முதல் முதன்முறையாக நிரந்தர ராணுவம் முதலிய அரசியல் வழிமுறைகளை செயல் படுத்திய ஒரு நாடு; சக்கரம், நீர்பாசனம், காலண்டர் உள்பட பல்வேறு பொருட்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நாடு, ஒரு அல்லது ஒருசில நாடுகளின் சுயநலத்தாலும், வர்த்தகம் முதலிய காரணங்களினாலும் சிதைக்கப்பட்டு, இனி மேலெழுந்து வருவது சந்தேகம் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டது என்றால் அதற்கு மிகப்பெரிய உதாரணம் ஈராக்.</p>
<p>ஈராக்கின் பெருமை கணக்கிலடங்காதது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கான உரிமைகளை சமநிலைப் படுத்தியதும், விவாகரத்து உரிமை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதும் வரலாறு காட்டும் உண்மை.</p>
<p>உலகின் முதல் காவியம் இங்குதான் படைக்கப்பட்டுள்ளது. கூனிபார்ஃம் என்ற முக்கோண வடிவ முத்திரைக் காவியமாக இது படைக்கப்பட்டுள்ளது.</p>
<p>இத்தகைய வரலாறுகளைக் கொண்ட ஒரு நாட்டில் ஆரம்பம் முதலாகவே ஏற்றத் தாழ்வுகளும் பிரிவினைகளும் இருந்து வந்ததை சாபக்கேடாகவே கொள்ள வேண்டும். இத்தகைய ஏற்றத்தாழ்வுகளும், கருப்புத் தங்கம் எனப்படும் க்ரூட் ஆயிலும் ஒருங்கிணைந்து அங்கு இருந்ததால் காலங்காலமாகவே அந்நியரின் கழுகுப் பார்வைகளில் தப்ப இயலாமல் இந்த நாடு இருந்துள்ளது.<br />
அண்டை மாநிலங்களான ஈரான், சவுதி போன்ற நாடுகளிடம் சுமூக மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு முன்னேற்றப் பாதையில் நடை போட்டிருக்க வேண்டிய இந்த நாடு, ஈரான், குவைத் போன்ற நாடுகளிடம் நட்புறவை வளர்க்கத் தவறியதால், எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருந்த ஆதிக்க சக்திகளின் வலையில் தாமாகவே போய் மாட்டிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.</p>
<p>மேலும் ஆதிக்க சக்திகளுடன் ஆராய்ந்து உறவு கொண்டிருக்க வேண்டிய அரசு, நெருக்கடி நிலை காரணமாகவோ, அரசியல் நிலை காரணமாகவே ஒப்பந்தங்கள் போட்டதும் அந்நியர்களை தாமே வரவேற்பதற்கு இடம் கொடுத்துள்ளது. ஈரான் ஈராக் போரில் ஈராக்கிற்கு மறைமுகமாக உதவி புரிந்த அமெரிக்கா அந்தப் பக்கம் சென்று குவைத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈராக்கின்மீது படைத் தொடுத்துள்ளது உச்ச கட்ட அரசியல் தந்திரம்.</p>
<p>மன்னராட்சி நடைபெற்றுவரும் நாடுகளும் சுதந்திரமாக அரசாட்சி செய்து கொண்டிருக்க, மக்களாட்சி நடந்துவந்த ஈராக்கில் வெடிகுண்டுத் தாக்குதல்களும், படுகொலைகளும் மலிந்துள்ளதற்கு காரணம் என்ன என்ற மக்களின் ஆதங்கங்களுக்கு வரலாற்றை முன்வைத்து, அமெரிக்காவின் அரசியல் தந்திரங்களையும் பட்டியலிட்டிருக்கிறது பாவை சந்திரன் எழுதி வெளிவந்துள்ள ஈராக் என்ற நூல்.</p>
<p>இத்தகைய அரசியல் குறுக்கு புத்திகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது வர்த்தகம் என்பதையும் இந்த நூல் எடுத்துக் காட்டுகிறது.</p>
<p>உள்நாட்டில் கட்டுப்பாட்டைக் கொண்டுவர முயற்சி செய்த சதாமின் நிலையையும், அதற்காக அவர் மேற்கொண்ட சில அடக்குமுறைகள் அந்த நேரத்தின் தேவை என்பதையும் குறிப்பிட இந்த நூல் மறக்கவில்லை.</p>
<p>ஆதிக்க சக்திகளின் தந்திரங்களால் ஏற்பட்ட இந்தப் போரினால் ஈராக்கின் பொருளாதார சிதைவு, குழந்தைகள் உள்பட நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொண்ட உடல்நலக் குறைபாடுகள் முதலியவை எடுத்துரைக்கப் பட்டுள்ளன.</p>
<p>ரசாயன உயிரி ஆயுதம் தயாரிக்கப்படவில்லை என்று தங்கள் நாட்டு நிபுணர்களே தெரிவித்த பின்பும் தாக்குதல்களைத் தொடர்ந்த அமெரிக்காவின் சுயநலப்போக்கிற்கு ஈராக்கின்மேல் இருந்த வர்த்தகக் காதல் காரணப்படுத்தப்பட்டுள்ளன.</p>
<p>இந்த நூலில் பிற்சேர்க்கையாக க.நா.சுப்ரமணியம் மொழிபெயர்த்த ‘கில்காமெஷ் காவியத்தின்’ முன்னுரையும், அரேபியாவில் ஆதிக்க சக்திகளுக்கு உதவி புரிந்த லாரன்ஸ் என்பவரின் வரலாற்றைக் கூறும் லாரன்ஸ் ஆஃப் அரேபியாவின் திரைக்கதையும் சேர்க்கப் பட்டுள்ளது சீரிய முயற்சி. அந்நாட்டு மன்னர்களின் வாழ்க்கை நிலைகளைப் பறைசாற்றும் கண்டுபிடிப்புகளும், தற்காலத்திய வரலாற்றையும் கட்டியம் கூறும் புகைப்படங்களை அங்காங்கே இணைத்திருப்பது கருத்திற்கு மட்டுமல்லாது பார்வைக்கும் நலம் பயக்கிறது.</p>
<p>ஈராக் பற்றிய வரலாற்று தெளிவை இந்த நூல் ஏற்படுத்தியிருப்பதை வரவேற்கலாம். உலகத்தின் கனவு தேசமாக இருந்திருக்கக்கூடிய ஈராக் உலக நாடுகளின் கண்முன்னே சிதைக்கப்பட்டுள்ளது. ஆதிக்க சக்தியின் அடுத்த இலக்குகளும் உலக மக்களின் கண்முன்னேயே குறிவைக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆயினும் உலக நாடுகள் மௌனம் சாதித்து வருகின்றன என்ற உண்மையை அச்சுறுத்தல் இல்லாமல் தெளிவாக உணர்த்திய ஆசிரியரைப் பாராட்டலாம்.<br />
ஈராக்<br />
ஆசிரியர்: பாவை சந்திரன்<br />
வெளியீடு: கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ்<br />
#92/66, டி.எஸ்.வி. கோயில் தெரு,<br />
மயிலாப்பூர்,<br />
சென்னை &#8211; 4.<br />
பக்கங்கள்: 228<br />
விலை: ரூ. 100<br />
ஆண்டு: டிசம்பர் 2004.</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/sreepa.wordpress.com/14/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/sreepa.wordpress.com/14/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sreepa.wordpress.com/14/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sreepa.wordpress.com/14/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sreepa.wordpress.com/14/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sreepa.wordpress.com/14/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sreepa.wordpress.com/14/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sreepa.wordpress.com/14/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sreepa.wordpress.com/14/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sreepa.wordpress.com/14/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sreepa.wordpress.com/14/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sreepa.wordpress.com/14/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sreepa.wordpress.com/14/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sreepa.wordpress.com/14/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sreepa.wordpress.com/14/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sreepa.wordpress.com/14/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=14&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sreepa.wordpress.com/2008/01/31/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/17f23ed926605548fd21a540d3e60f1d?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">preciousdeepa</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மரணத்திற்கு மரணம் தீர்வாகுமா?</title>
		<link>http://sreepa.wordpress.com/2008/01/16/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be/</link>
		<comments>http://sreepa.wordpress.com/2008/01/16/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Wed, 16 Jan 2008 13:16:40 +0000</pubDate>
		<dc:creator>preciousdeepa</dc:creator>
				<category><![CDATA[Article]]></category>

		<guid isPermaLink="false">http://sreepa.wordpress.com/2008/01/16/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be/</guid>
		<description><![CDATA[மனிதர்கள் நாடோடிகளாக வாழ்ந்த காலத்தில் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள் என்பதும் கிடைத்ததை உண்டு தாங்கள் செல்லும் இடங்களில் தங்களுடைய குடிப்பகுதிகளை நிர்மாணித்துக் கொண்டு வாழ்ந்தார்கள் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆற்றுவழி சமுதாயத்திற்கு மனித இனம் மாற்றம் பெற்றபோதே, தான், தனக்கு என்ற கொள்கைகள் வலுப்பெறத் தொடங்கின. மது, பொன், பெண், பொருள் போன்றவற்றிற்கான தேடல்களும் அதுகுறித்த போராட்டங்களும் அத்தகைய காலகட்டங்களிலேயே தொடங்கின. பிறகு ஒரு தலைவனுக்குகீழ் வாழ சமுதாயம் முற்பட்டபோது குற்றங்கள் வரைமுறை செய்யப்பட்டு அதற்கான [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=13&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>மனிதர்கள் நாடோடிகளாக வாழ்ந்த காலத்தில் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள் என்பதும் கிடைத்ததை உண்டு தாங்கள் செல்லும் இடங்களில் தங்களுடைய குடிப்பகுதிகளை நிர்மாணித்துக் கொண்டு வாழ்ந்தார்கள் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆற்றுவழி சமுதாயத்திற்கு மனித இனம் மாற்றம் பெற்றபோதே, தான், தனக்கு என்ற கொள்கைகள் வலுப்பெறத் தொடங்கின. மது, பொன், பெண், பொருள் போன்றவற்றிற்கான தேடல்களும் அதுகுறித்த போராட்டங்களும் அத்தகைய காலகட்டங்களிலேயே தொடங்கின.</p>
<p>பிறகு ஒரு தலைவனுக்குகீழ் வாழ சமுதாயம் முற்பட்டபோது குற்றங்கள் வரைமுறை செய்யப்பட்டு அதற்கான தீர்வுகளும் காணப்பட்டன. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் போன்ற வகையான தண்டனைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன. மரண தண்டனை என்பதும் இத்தகைய மன்னராட்சி காலத்தில்தான் மனித இனத்தில் வேரூன்ற ஆரம்பித்தது.</p>
<p>ராஜ்யங்களுக்காகவும், பெண்களுக்காகவும் தங்களுடைய ஆளுமைத்திறனை வெளிக்காட்டுவதற்காகவும், தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் மரண தண்டனையை ஆயுதமாகப் பயன்படுத்தினார்.</p>
<p>இதிலும் ஒரே குற்றத்திற்கு உயர்ந்த ஜாதியினருக்கு ஒரு தண்டனையும் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு கொடுமையான தண்டனைகளும் கொடுக்கப்பட்டதையும் வரலாறு பதிவு செய்துள்ளது.</p>
<p>பழம்பெருமை பேசும் உலக நாடுகளின் வரலாற்றை புரட்டினால், அதில் ரத்தவாடை வீசுவதைத் தவிர்க்க முடியாது. போர் முதலிய காரணங்களுக்காக மக்கள் கொன்று குவிக்கப்பட்டதை அது தெரிவிக்கும்.</p>
<p>ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றங்களுக்கு உட்படும் நாடுகளில் புதிதாக பதவியில் அமரும் ஆட்சியாளர்கள், முந்தைய ஆட்சியினர் மீதான தங்களின் பழியுணர்வை அந்த நாட்டை அழித்து தீக்கிரையாக்குவதன் மூலமும் அதன் மக்களைக் கொன்று குவிப்பதன் மூலமுமே தீர்த்துக் கொண்டார்கள் என்பதும் வரலாறு காட்டும் உண்மை.</p>
<p>இதற்கு ஆதாரங்களாக நம் நாட்டின் சேர, சோழ பாண்டியர்களின் வரலாறுகளையும், உலக அளவில் ஏற்பட்ட உலகப்போர்களையும் எடுத்துக் கொள்ளலாம்.</p>
<p>மன்னராட்சி மாறி மக்களாட்சி ஏற்பட்டபின்பு சட்டங்களின் துணைகொண்டு பகிரங்கமாக மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தற்போதைய காலகட்டத்திலும் மனித நேயத்துக்கு மாறான இந்த இழிநிலை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவது வேதனைக்குரிய விஷயமாகும்.</p>
<p>உணர்வு ரீதியாகவோ, மதம், கொள்கை சார்ந்தோ உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு நடத்தப்படும் கொலைகளுக்கு மரண தண்டனைதான் தீர்வாக இருக்க வேண்டும் என்பது இல்லை.</p>
<p>ஒரு மனிதன் தன்னுடைய தவறை நினைத்து திருந்துவதற்கான வாய்ப்பைக் கொடுப்பதற்கு முன்பே அவனை தூக்கில் போடுவதால் சமுதாயத்திற்கு எந்த பலனும் இல்லை என்பதே உண்மை.</p>
<p>தற்காலத்தில் பெருகிவரும் வெடிகுண்டு கலாச்சாரங்களுக்கும் வன்முறை சம்பவங்களுக்கும் மரண தண்டனை தீர்வாக முடியாது. மாறாக அவர்களை அத்தகைய சூழ்நிலைக்கு உட்படுத்தும் காரணிகளைக் களைய முற்படுவதே அரசுகளின் கடமையாக இருக்க வேண்டும். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமுதாயத்தின் அடிப்படை தீமைகளை விரட்ட முயன்றால் இத்தகைய வன்முறை கலாச்சாரங்கள் மெல்ல பின்வாங்கும் என்பது உறுதி.</p>
<p>ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முயலும் அரசால், வன்முறைகளையும் வெடிகுண்டு கலாச்சாரத்தையும் குறைக்க இயலும்.</p>
<p>அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் முதன்முறையாக சட்டபூர்வமாக மரணதண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைக்கு பதிலாக ஜாமீனில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 1963ஆம் ஆண்டிலிருந்து அந்த மாநிலத்தில் யாரும் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படவில்லை என்று அந்த நாட்டினர் நெஞ்சுயர்த்துகிறார்கள்.</p>
<p>ஐரோப்பிய நாடுகளும், லத்தீன் அமெரிக்க நாடுகளும் மரண தண்டனை ஒழிப்பை வரவேற்றுள்ளன. ஆனால் அரபு நாடுகள் இதை எதிர்க்கின்றன.</p>
<p>ஒரு மரண தண்டனைக் கைதி சிறையில் பல வருடங்களைக் கழிக்க நேரும்போது, அந்த புதிய சூழலில் அவருக்கு மனமாற்றம் ஏற்படலாம். புத்தகங்கள் முதலியவற்றின் துணைகொண்டு நல்ல இயல்பையும் அவர் பெற வாய்ப்புகள் அதிகம். வெளியே வரும்போது அவருக்கான வாழ்க்கைச் சூழல்களையும் அரசு ஏற்படுத்தித் தரலாம். இதன்மூலம் குற்றங்கள் குறையும். இதைவிடுத்து, அவரின் செயலால் ஏற்பட்டுள்ள பாதகங்களை அவர் உணரும் முன்னரே அவருக்கு மரணதண்டனை கொடுக்கப்படுவதால் என்ன பயன்?</p>
<p>சூழ்நிலையின் கோரப்பிடியில் சிக்கி பாதகங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை என்பது கண்டிப்பாக நிரந்தர தீர்வாக இருக்க முடியாது. அவர்களின் சந்ததிகளை மனதில் வைத்து ஒரு நிரந்தர தீர்மானம் ஏற்படுத்த வேண்டும்.</p>
<p>சென்ற தலைமுறையில் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களையும், பண்பாட்டையும் போதித்துவந்த நிலை தற்போது மாறியுள்ளது. குழந்தைகளை தங்களின் கனவுகளை ஏற்றும் பொம்மைகளாக மாற்றிவரும் தற்காலத்திய பெற்றோர்களே இத்தகைய வன்முறைக் கலாச்சாரங்களுக்கும் காரணமாக இருக்கின்றனர்.</p>
<p>குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அவர்களுக்கு எதிராக சமுதாயம் ஏற்படுத்தும் மாற்றங்கள் பெரும்பாலும் அவர்கள் அழிவுப்பாதையில் செல்லவே வழிவகுக்கும். பெரியவர்களின் வார்த்தைகளுக்கும் அனுபவங்களுக்கும் மதிப்புக் கொடுத்துவந்த இளைய தலைமுறையினர், தற்காலத்தில் கிடைக்கும் வாழ்க்கை சூழல்களால், மாறிவரும் சமூக மாற்றங்களால் வன்முறை மனங்களைக் கொண்டவர்களாகவே வளர்கின்றனர்.</p>
<p> மாறிவரும் சமூக நிலைமைகளில் அதிகப்படியான வன்முறைகளுக்கு மன்னிப்பு வழங்குதல் என்பது நடைமுறை சாத்தியமாக இருக்காது; இதனால் சிறைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது போன்ற வாதங்களை மரண தண்டனை ஒழிப்பிற்கு எதிரானவர்கள் முன் வைக்கலாம். ஆனால் எந்த மனிதனும் பிறக்கும்போதே குற்றவாளியாகப் பிறப்பதில்லை. அவனுடைய வாழும் சூழல் மற்றும் அவனது வாழ்வில் அவன் எதிர்நோக்கும் பற்றாக்குறைகளே குற்றங்களுக்கான காரணிகளாக இருக்கின்றன.</p>
<p>வன்முறைக்கு தீர்வு வன்கொலையாக இருக்க முடியாது என்பதை நினைவில் நிறுத்தி உலக நாடுகள் அனைத்தும் இணைந்து மரணதண்டனைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்கும் திட்டவட்டமான செயல்பாடாக அது இருந்தால், சமுதாய முன்னேற்றத்திற்கான நல்ல தீர்வாக அது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/sreepa.wordpress.com/13/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/sreepa.wordpress.com/13/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sreepa.wordpress.com/13/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sreepa.wordpress.com/13/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sreepa.wordpress.com/13/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sreepa.wordpress.com/13/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sreepa.wordpress.com/13/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sreepa.wordpress.com/13/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sreepa.wordpress.com/13/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sreepa.wordpress.com/13/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sreepa.wordpress.com/13/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sreepa.wordpress.com/13/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sreepa.wordpress.com/13/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sreepa.wordpress.com/13/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sreepa.wordpress.com/13/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sreepa.wordpress.com/13/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=13&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sreepa.wordpress.com/2008/01/16/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/17f23ed926605548fd21a540d3e60f1d?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">preciousdeepa</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>துப்புரவு அறிதல்</title>
		<link>http://sreepa.wordpress.com/2007/12/27/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://sreepa.wordpress.com/2007/12/27/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 27 Dec 2007 07:17:36 +0000</pubDate>
		<dc:creator>preciousdeepa</dc:creator>
				<category><![CDATA[Article]]></category>

		<guid isPermaLink="false">http://sreepa.wordpress.com/2007/12/27/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/</guid>
		<description><![CDATA[அனைவரும் சமம், இருப்பதை பொதுவாக்க வேண்டும் என்ற கோஷங்கள் ஒரு புறம் அறிஞர்களாலும், தலைவர்களாலும் மேடைப் பேச்சுகளிலும் எழுத்துக்களிலும் வலியுறுத்தப்பட்டு வந்துக் கொண்டிருக்கிறது. ஆயினும். சமூகத்தில் கீழ்தட்டு மக்களின் வாழ்க்கைநிலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளையர்களால் அதிகமாக அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தினர், சுதந்திரத்திற்குப் பின்னரும் அதே நிலையில் நீடித்து வருவது வேதனைக்குரிய விஷயமாகவே உள்ளது. நமது சமூகத்தில் ஒரு சாராருக்கு மட்டும் கிடைத்து வரும் வாழ்க்கையின் இன்பங்கள், மற்றொரு சாராருக்கு மறுக்கப்பட்டு வருவதை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=12&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>அனைவரும் சமம், இருப்பதை பொதுவாக்க வேண்டும் என்ற கோஷங்கள் ஒரு புறம் அறிஞர்களாலும், தலைவர்களாலும் மேடைப் பேச்சுகளிலும் எழுத்துக்களிலும் வலியுறுத்தப்பட்டு வந்துக் கொண்டிருக்கிறது. ஆயினும். சமூகத்தில் கீழ்தட்டு மக்களின் வாழ்க்கைநிலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளையர்களால் அதிகமாக அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தினர், சுதந்திரத்திற்குப் பின்னரும் அதே நிலையில் நீடித்து வருவது வேதனைக்குரிய விஷயமாகவே உள்ளது.</p>
<p>நமது சமூகத்தில் ஒரு சாராருக்கு மட்டும் கிடைத்து வரும் வாழ்க்கையின் இன்பங்கள், மற்றொரு சாராருக்கு மறுக்கப்பட்டு வருவதை மறுக்க இயலாது. வளர்ந்துவரும் இன்றைய சமூகத்திலும் கீழ்நிலையில் உள்ளவர்கள் காலங்காலமாக ஒரு மனிதன் செய்யத் தயங்கும் வேலை நிலைகளில் தொடர்ந்து ஈடுபடுவது என்பது தடை செய்யப்படாத ஒன்றாகவே நிலவி வருகிறது.</p>
<p>தலைமுறைத் தலைமுறையாக இத்தகைய கீழ்நிலை மக்கள் துப்புரவுப் பணிகளை செய்யும் ஒரு இயந்திரமாகவே மாற்றம் பெற்று விட்டனர் என்பதே வருத்தத்திற்குரிய உண்மையாக உள்ளது.</p>
<p>இந்த வேலைகளை இவர்கள் செய்ய முற்படும்போது ஏற்படும் வலிகளையும், இவர்களின் சந்ததியினர் எதிர்கொள்ளும் இழிநிலைகளையும் சொல்கிறது ‘துப்புரவு அறிதல்’ என்ற குறும்படம்.</p>
<p>மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கன்னியப்பன் என்ற மலம் அள்ளும் தொழிலாளிக்கு எதிரில் ஒருவர் வந்து அமர்ந்தவுடனேயே அவருக்கு கண்களில் கண்ணீர் கொப்பளிக்கிறது. காரணம் என்னவாக இருக்கும்?</p>
<p>அவரின் நினைவலைகளுடனேயே நம்மையும் பயணிக்க வைக்கிறார் இயக்குநர். மருத்துவமனையில் தன்னுடைய மனைவியுடன் சிகிச்சைக்காக செல்கிறார் கன்னியப்பன். அவரைப் பரிசோதிக்கும் மருத்துவர், அவர் செய்யும் மலம் அள்ளும் வேலையைத் தொடர்வதும், அந்த வேலையின் பொருட்டு மது அருந்துவதும் தொடர்ந்தால், அது அவரின் உயிருக்கு ஆபத்தாக அமையும் என்று அறிவுறுத்துகிறார்.</p>
<p>மருத்துவரின் ஆலோசனையையும், மனைவியின் எடுத்துரைத்தல்களையும் உதாசீனம் செய்யும் கன்னியப்பன் குடிப்பதையும், மலம் அள்ளுவதையும் தொடர்கிறார்.</p>
<p>ஒருநாள் ஓய்வுடன் அவர் வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருக்கும்போது, மனிதர் கழிவை மனிதர் அள்ளுவதை நிறுத்த வலியுறுத்தி கோஷங்கள் போடும் ஒரு சிலரை பார்க்க நேரிடுகிறது. தங்களின் நன்மையைக் கருதி அவர்கள் போராடுவதை பார்க்கும் கன்னியப்பன்  தங்களின் பிழைப்பில் மண் அள்ளிப் போடுவதாக அவர்களைப் பற்றி தன் நண்பனிடம் ஏளனம் செய்கிறார்.</p>
<p>வங்கியில் பணிபுரியும் ஒருவர் உள்பட போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் காவல்துறையினர் அந்த இடத்தில் இருக்கும் கன்னியப்பனையும் கைது செய்கின்றனர். அங்கேயும் உயரதிகாரி ஒருவரின் வீட்டில் அடைத்திருக்கும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கையுயர்த்துகிறார் கன்னியப்பன்.</p>
<p>இதையடுத்து உடல்நலம் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கன்னியப்பன், மலம் அள்ளுபவர்களின் வாழ்விற்காக போராடியவர்களில் ஒருவரான, வங்கி ஊழியரின் வருகையைக் கண்டே கண்ணீர் வடிப்பதாக நகர்கிறது படம்.</p>
<p>மருத்துவமனைக்கு வரும் அந்த வங்கி ஊழியர், கன்னியப்பனின் மனைவிக்கு ஒரு பள்ளியில் வேலை வாங்கித் தந்துள்ளதாகவும், அவரின் குழந்தையின் பள்ளிப் படிப்பை கவனித்துக் கொள்வதாகவும், அவருக்கும் நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறுகிறார். இந்த அளவில் கதை முடிவடைகிறது.</p>
<p>துப்புரவுப் பணியாளர்களின் வேதனைகளைச் சொல்லும் இந்தக் குறும்படம், அவர்களின் குழந்தைகள் எதிர்கொள்ளும் இழிநிலைகளையும் கூற முற்பட்டுள்ளது. கன்னியப்பனின் மகன் பள்ளியில் அறிமுகம் செய்துக் கொள்ள நேரும்போது, தன்னுடைய தந்தை மலம் அள்ளுகிறார் என்று சொல்லத் தயங்குவதையும், அவ்வாறு கூறியவுடன் கூட இருக்கும் மற்ற மாணவர்கள் நகைப்பதையும், குறும்படம் அதன் போக்கில் கூறியுள்ளது. இது மலம் அள்ளுபவர்கள் மட்டுமில்லாமல் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் வேதனைகளுக்கு ஆளாவது குறித்த மறுகோணத்தை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்துகிறது.</p>
<p>மேலும் இறுதியில் வங்கி ஊழியர் மூலம் தன்னுடைய வாழ்க்கைக்கு புதிய வழி கிடைப்பதையும், தன்னுடைய மனைவி மற்றும் மகன் போகும் பாதையில் பிரகாசமான ஒளி தெரியும் வகையிலும் இயக்குநர் படம் பிடித்துள்ளார்.</p>
<p>‘ஒரு மனிதனின் மலத்தை இன்னொரு மனிதன் அள்ளுவது பாவம், கொடுமை, நான் இன்னொரு முறை பிறக்க நேரிட்டால் அவர்களின் வீட்டில் பிறந்து, அவர்களை மனிதத் தன்மையற்ற இத்தகைய கொடுமைகளிலிருந்து மீட்பேன்’ என்ற காந்தியடிகளின் வாசகங்கள் மற்றும் மலம் அள்ளுபவர்களின் பணிச்சூழல்களை புகைப்படங்களின் வாயிலாக வெளிப்படுத்தியிருப்பது நல்ல முயற்சி.</p>
<p>மலம் அள்ளுவதை தேவத் தொழிலாகச் செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும், அதை எதிர்த்துக் கோஷங்களும் வலுத்துவரும் இன்றைய காலக்கட்டத்தில் வெளிவந்துள்ள இந்தக் குறும்படம் சமுதாயத் தீமைகளை கூற முற்பட்டுள்ளது வரவேற்கத் தக்கதே. ஆயினும் மலம் அள்ளும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் சார்பாக வெளிவந்துள்ள இந்த குறும்படம் அவர்களின் வலியை இன்னும் ஆழமாகக் கூற முற்பட்டிருந்தால், மற்றவர்களின் கழிவுகளை அள்ளும் அவர்களின் வாழ்வில் ஒளி கண்டிப்பாக மலர்ந்திருக்கும்.</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/sreepa.wordpress.com/12/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/sreepa.wordpress.com/12/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sreepa.wordpress.com/12/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sreepa.wordpress.com/12/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sreepa.wordpress.com/12/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sreepa.wordpress.com/12/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sreepa.wordpress.com/12/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sreepa.wordpress.com/12/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sreepa.wordpress.com/12/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sreepa.wordpress.com/12/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sreepa.wordpress.com/12/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sreepa.wordpress.com/12/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sreepa.wordpress.com/12/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sreepa.wordpress.com/12/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sreepa.wordpress.com/12/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sreepa.wordpress.com/12/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=12&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sreepa.wordpress.com/2007/12/27/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/17f23ed926605548fd21a540d3e60f1d?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">preciousdeepa</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நாகரிகத்தின் பிடியில் நாணயத்தை இழக்கலாமா?</title>
		<link>http://sreepa.wordpress.com/2007/12/13/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be/</link>
		<comments>http://sreepa.wordpress.com/2007/12/13/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Thu, 13 Dec 2007 12:57:05 +0000</pubDate>
		<dc:creator>preciousdeepa</dc:creator>
				<category><![CDATA[Article]]></category>

		<guid isPermaLink="false">http://sreepa.wordpress.com/2007/12/13/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be/</guid>
		<description><![CDATA[ðˆ¶ Ý‡´èÀ‚° º¡¹õ¬ó, ð®ˆ¶ ð†ìî£Kò£õ¶, ä‰Fô‚è ê‹ð÷ˆF™ å¼ «õ¬ô¬òˆ «î®‚ ªè£œõ¶, i†´ «õ¬ôè¬÷ ªêŒ¶ ªè£‡´‹, °ö‰¬îè¬÷Š ð£˜ˆ¶‚ ªè£‡´‹, î¡ î£Œ î‰¬îò¬ó èõQˆ¶‚ ªè£‡´‹ i†«ì£´ Þ¼‚è‚Ã®ò å¼ ªð‡¬í ñí‰¶ ªè£œõ¶, ÜFèð†ê‹ ªê£‰îñ£è å¼ i´ õ£ƒ°õ¶, õ£›‚¬è¬ò Þ‰î Ü÷M™ ê‰«î£ûñ£è õ£›õ¶&#8230; Þ¶«õ ð®ˆî Þ¬÷ë˜èO¡ èùõ£è Þ¼‰¶ õ‰î¶. &#160; Ü‰Gò ºîh´èœ Þ‰Fò£M™ ÜÂñF‚èŠð†ìî¡ M¬÷õ£è ð¡ù£†´ GÁõùƒèœ Þ‰Fò£MŸ°œ ð¬ìªò´‚èˆ [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=11&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><font face="TAM-KTS-T6">ðˆ¶ Ý‡´èÀ‚° º¡¹õ¬ó, ð®ˆ¶ ð†ìî£Kò£õ¶, ä‰Fô‚è ê‹ð÷ˆF™ å¼ «õ¬ô¬òˆ «î®‚ ªè£œõ¶, i†´ «õ¬ôè¬÷ ªêŒ¶ ªè£‡´‹, °ö‰¬îè¬÷Š ð£˜ˆ¶‚ ªè£‡´‹, î¡ î£Œ î‰¬îò¬ó èõQˆ¶‚ ªè£‡´‹ i†«ì£´ Þ¼‚è‚Ã®ò å¼ ªð‡¬í ñí‰¶ ªè£œõ¶, ÜFèð†ê‹ ªê£‰îñ£è å¼ i´ õ£ƒ°õ¶, õ£›‚¬è¬ò Þ‰î Ü÷M™ ê‰«î£ûñ£è õ£›õ¶&#8230; Þ¶«õ ð®ˆî Þ¬÷ë˜èO¡ èùõ£è Þ¼‰¶ õ‰î¶.</font><font face="TAM-KTS-T6"></p>
<p align="justify">&nbsp;</p>
<p align="justify">Ü‰Gò ºîh´èœ Þ‰Fò£M™ ÜÂñF‚èŠð†ìî¡ M¬÷õ£è ð¡ù£†´ GÁõùƒèœ Þ‰Fò£MŸ°œ ð¬ìªò´‚èˆ ªî£ìƒAò¾ì¡ «ñŸÃPò Þ¬÷ëQ¡ èù¾èO™ ñ£Ÿøƒèœ ãŸð†´œ÷ù. ®AK º®‚A«ø£«ñ£ Þ™¬ô«ò£, ÝƒAôŠ ¹ô¬ñ Þ¼‰î£™ «ð£¶‹- Þ¼¬è c†® õó«õŸè ïèK¡ HHæ‚èÀ‹ è£™ ªê¡ì˜èÀ‹ ñŸÁ‹ ðô GÁõùƒèÀ‹ îò£ó£è àœ÷ù.</p>
<p align="justify">&nbsp;</p>
<p align="justify">Ý‡èÀ‹, ªð‡èÀ‹ «ð£†® «ð£†´‚ªè£‡´ «î˜‰ªî´‚°‹ Þ‰î «õ¬ôèO™ ¬èG¬øò ê‹ð÷‹ A¬ìˆ¶ M´Aø¶. Üõ˜èO¡ èŸð¬ù‚° â†ì£î àòóˆF™ Þ‰GÁõùƒèœ Þõ˜è¬÷ GÁˆF ¬õˆ¶ «õ®‚¬èŠ ð£˜‚A¡øù. ÞîŸ°‚ è£óí‹, ªõOï£´èO™ Þ‰î «õ¬ôèÀ‚° Ü÷¾‚èFèñ£ù ºîh´ ªêŒò «õ‡´‹. Þ‰Fò£ «ð£¡ø õ÷˜‰¶õ¼‹ ï£´èO™ Þ‰î «õ¬ôèÀ‚è£ù ºîh´ °¬ø«õ.</p>
<p align="justify">&nbsp;</p>
<p align="justify">è™ÖK, ðœO ï£†èO™ ä‰FŸ°‹ ðˆFŸ°‹ ªðŸ«ø£K¡ ¬è¬ò âF˜ð£˜ˆ¶ õ£¿‹ Þ¬÷ë˜èO¡ ¬èèO™ Ü÷¾‚èFèñ£ù ðí‹ A¬ì‚°‹«ð£¶, Ü¶ Üõ˜èO¡ õ£›‚¬èŠ ð£¬î¬ò ñ£ŸP Ü¬ñ‚Aø¶. Ãì«õ ÝƒAô «ñ£èº‹ Þ¬í‰¶ ªè£œ÷ Þó‡´‹ «ê˜‰¶ Ü¬ñFò£ù ê‰«î£ûñ£ù õ£›‚¬è â¡ø ªè£œ¬è ñ£P, âƒ«è»‹ âŠ«ð£¶‹ ê‰«î£û‹ â¡ø G¬ô‚° Þ¬÷ë˜èœ ªê™ô å¼ è£óíñ£è Ü¬ñ‰¶ M´Aø¶.</p>
<p align="justify">&nbsp;</p>
<p align="justify">î¬ôº¬ø Þ¬ìªõOèÀ‹ «ð£†®Š «ð£†´‚ ªè£‡´, ÜÂðõƒèÀ‚° º‚Aòˆ¶õ‹ îó£î ñùG¬ô‚° Üõ˜è¬÷ˆ îœÀAø¶. Þîù£™ ªðŸ«ø£˜èœ Hœ¬÷èO¡ ï™õ£›‚¬è‚è£è ÃÁ‹ â‰î Ý«ô£ê¬ùè¬÷»‹ è£F™ «ð£†´‚ ªè£œ÷£î G¬ô»‹ Üõ˜èÀ‚° õ‰¶M´Aø¶.</p>
<p align="justify">&nbsp;</p>
<p align="justify">ªð¼‹ð£½‹ Þó¾ «ïóƒèO™ ÜFèñ£è ªêò™ð´‹ Þ‰î GÁõùƒèœ, õ£ó ÞÁFJ™ Ü«ïèñ£è M´º¬ø ÜOˆ¶M´Aø¶. Þîù£™ ïèóƒèO™ ‘i‚â‡† ð£˜†®èÀ‹’ ÜFèKˆ¶ õ¼A¡øù.</p>
<p align="justify">&nbsp;</p>
<p align="justify">êÍè‚ è†´Šð£´è¬÷ ªõ†®ªòP‰¶M†´, ªõOï£†´ «ñ£èˆF™ Ý‡ ªð‡ MˆFò£êI¡P ðö°‹ Üõ˜èœ F¼ñíˆFŸ° º¡«ð àì™ àøM™ ß´ð´õî£è¾‹, Üî¡ è£óíñ£è è¼‚è¬ôŠ¹èœ ÜFèKˆ¶œ÷î£è¾‹ ÝŒ¾ º®¾èœ ªîKM‚A¡øù. â‰î Ü÷MŸ° îèõ™ ªî£N™¸†ðˆF™ àôè ï£´èÀ‚° Þ¬íò£è õ÷˜‰¶ õ¼A«ø£«ñ£ Ü‰î Ü÷MŸ° âŒ†v «ï£ò£™ ð£F‚èŠð†«ì£˜ â‡E‚¬èJ½‹ àò˜‰¶ªè£‡«ì ªê™½‹ Üð£òº‹ ãŸð†´œ÷¶.</p>
<p align="justify">&nbsp;</p>
<p align="justify">Þˆî¬èò èô£„ê£ó ñ£ŸøƒèOù£™, Þ¬÷òî¬ôº¬øJù˜ ð£F‚èŠ ð†´œ÷îŸ° êeðè£ô ê‹ðõƒèœ àî£óíñ£è àœ÷¶. ªð‡èÀ‹ Ý‡èÀ‹ Þó¾ ðè™ ð£ó£ñ™ îƒèœ «õ¬ô «ïóƒè¬÷ Ü¬ñˆ¶‚ ªè£œõî¡ Íô‹ ðô ð£Lò™ õ¡º¬ø ñŸÁ‹ ªè£¬ô„ ê‹ðõƒèÀ‹ ïì‰îõ‡í‹ àœ÷ù. ÞóM™ î¡ù‰îQò£è õ£èùƒèO™ ªê™ô «õ‡®ò è†ì£òˆFŸ° Ý÷£°‹ ªð‡èœ ðŸPò ªêŒFèœ ï‹¬ñ èô‚èºø„ ªêŒA¡øù.</p>
<p align="justify">&nbsp;</p>
<p align="justify">«ñ½‹ Þˆî¬èò ðEèO™ àœ÷õ˜èœ ñùgFò£ù ñŸÁ‹ àì™gFò£ù «ï£ŒèÀ‚° àœ÷£õ¶‹ êÍè Ü„²Áˆî™èO™ å¡ø£è àœ÷¶.</p>
<p align="justify">&nbsp;</p>
<p align="justify">èEQ ªî£ì˜ð£ù Þˆî¬èò «õ¬ô õ£ŒŠ¹è÷£™, Þô‚Aò‹ àœO†ì ð™«õÁ ¶¬øèO™ îƒèœ õ£›‚¬èŠ ð£¬î¬ò Ü¬ñˆ¶‚ ªè£œÀ‹ M¼Šð‹ Þ¬÷ò î¬ôº¬ø‚° Þ™ô£ñ™ «ð£ŒM†ì¶. ªð¼Aõ¼‹ «õ¬ôõ£ŒŠ¹è÷£™ õ÷¼‹ °ö‰¬îèÀ‹ CÁõòF«ô«ò è‹ŠÎ†ì˜ èŸÁ‚ ªè£œ÷«õ ªðŸ«ø£˜è÷£™ õL»ÁˆîŠð´A¡øù˜. Þîù£™ è¬ôê£˜‰î ÜPM¬ù»‹, ÜöAò™è¬÷»‹, ð‡¬ìò ñ‚èœ ïñ‚è£è «î®ˆî‰î Ýù‰îƒè¬÷»‹ Þö‰¶, àì™ à¬öŠ¹ì¡ Ã®ò M¬÷ò£†´è¬÷»‹, îƒèœ °ö‰¬î¬ñ¬ò»‹ ªî£¬ô‚°‹ G¬ô‚° Üõ˜èœ Ý÷£A¡øù˜.</p>
<p align="justify">&nbsp;</p>
<p align="justify">Þ‰î Mîñ£ù î£‚èˆ¬î êeðˆF™ îIN™ ªõOò£ù ‘èŸø¶ îI›’ â¡ø F¬óŠðìº‹ õL»ÁˆFò¶. ð¡ªù´ƒè£ôñ£è Þ‰î ñ‡E™ «õÚ¡Pò îIö£™ âOî£èŠ ªðøº®ò£î ªê™õˆ¬î»‹, ðîM ñŸÁ‹ ªê£°ê£ù õ£›‚¬è¬ò»‹, Þ¼ð¶ Ý‡´èÀ‚° º¡¹ õ‰î è‹ŠÎ†ì˜ ªè£´Šð¬îŠ ðŸPò ãó£÷ñ£ù îINô‚Aò ñ£íõ˜èO¡ °ºø™ Ü‰îˆ F¬óŠðìˆF™ ªõOŠð´ˆîŠð†ì¶.</p>
<p align="justify">&nbsp;</p>
<p align="justify">îèõ™ ªî£N™¸†ð‹ ê‹ð‰îŠð†ì «õ¬ôèOù£™ õ£›‚¬è„ Åö™èO™ ñ£ŸøˆFŸ° à†ð´ðõ˜è÷£™ ð£F‚èŠð´õ¶, ÞF™ CP¶‹ ê‹ð‰îŠðì£î «õªø£¼ õ£›‚¬è„ ÅöL™ õ£ö «ï¼‹ ï´ˆîó õ˜‚èˆFù«ó. Þˆî¬è«ò£ó¶ ªê™õ‚ °MŠHù£™ ãÁ‹ ªð£¼†èO¡ M¬ôõ£C, i†´ õ£ì¬èèœ ñŸÁ‹ ñ¬ùèœ-è†ììƒèO¡ M¬ôàò˜¾ «ð£¡ø¬õ Þõ˜è¬÷ G¬ô°¬ôò ¬õˆ¶ õ£›‚¬èJ¡ MO‹H™ GŸè ¬õˆ¶M´Aø¶.</p>
<p align="justify">&nbsp;</p>
<p align="justify">âF½‹ ñ£Ÿøˆ¬î M¼‹¹‹ Þ¬÷ò î¬ôº¬øJù˜ îƒèÀ¬ìò M¼Šðƒè¬÷ ñ£ŸP‚ ªè£œõî¡ Íô«ñ Þˆî¬èò õ£›‚¬è º¬øèO™ ñ£Ÿøƒèœ ãŸð´‹. êÍè ÜcF‚° âFó£è ªó÷ˆFó‹ ðöè «õ‡®ò õòF™ bò ðö‚èõö‚èƒè¬÷Š ðö°õ¬î M´ˆ¶ îƒèœ ï£†ìƒè¬÷ õ£›M¡ à‡¬ñò£ù ê‰«î£ûƒèO¡ð£™ F¼ŠH, ïñ¶ êÍè èô£„ê£óƒè¬÷ «ñ‹ð´ˆî¾‹, Þô‚Aò C‰î¬ùè¬÷ õ÷Šð´ˆF‚ ªè£œ÷¾‹ î¬ôŠð†ì£™ ñ†´«ñ Ý«ó£‚Aòñ£ù èô£„ê£ó ð‡ð£†´ õ£›Mò™è¬÷ à¼õ£‚A‚ ªè£œ÷ º®»‹.</p>
<p align="justify">&nbsp;</p>
<p align="justify">&nbsp;</p>
<p>-ÿð£</p>
<p></font></p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/sreepa.wordpress.com/11/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/sreepa.wordpress.com/11/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sreepa.wordpress.com/11/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sreepa.wordpress.com/11/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sreepa.wordpress.com/11/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sreepa.wordpress.com/11/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sreepa.wordpress.com/11/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sreepa.wordpress.com/11/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sreepa.wordpress.com/11/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sreepa.wordpress.com/11/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sreepa.wordpress.com/11/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sreepa.wordpress.com/11/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sreepa.wordpress.com/11/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sreepa.wordpress.com/11/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sreepa.wordpress.com/11/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sreepa.wordpress.com/11/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=11&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sreepa.wordpress.com/2007/12/13/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/17f23ed926605548fd21a540d3e60f1d?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">preciousdeepa</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கொடிது கொடிது ஏகாந்தம் கொடிது. . .</title>
		<link>http://sreepa.wordpress.com/2007/12/01/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95/</link>
		<comments>http://sreepa.wordpress.com/2007/12/01/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Sat, 01 Dec 2007 13:20:39 +0000</pubDate>
		<dc:creator>preciousdeepa</dc:creator>
				<category><![CDATA[Article]]></category>

		<guid isPermaLink="false">http://sreepa.wordpress.com/2007/12/01/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95/</guid>
		<description><![CDATA[அன்னிய மோகத்தில் நமது கலாச்சார ரீதியான வாழ்க்கையை இழந்துக் கொண்டிருக்கிறோம். அன்று நம் நாட்டினர் வாழ்ந்த இயற்கையோடியைந்த வாழ்க்கையையும் உணவே மருந்து என்ற பழக்கத்தையும் தொலைத்துவிட்டு, பலவகையான உடல்நலம் மற்றும் வாழ்க்கைக் குறைகளையும் வைத்துக் கொண்டுத் தவிக்கும் நிலையை அடைந்திருக்கிறோம். வெளிநாட்டினரே நம்முடைய யோகா, உணவே மருந்து முறைகளை எண்ணி வியந்து வரும் வேளையில் நாம் அதையெல்லாம் தொலைத்துவிட்டிருக்கிறோம். இதேபோன்று, வயதானவர்களின் அனுபவங்களையும், அவர்களின் ஆலோசனைகளையும் ஏற்கும் மனநிலை அற்ற நிலையில் அவர்களை உதாசீனப் படுத்திவருகிறோம். வயதானவர்கள் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=10&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>அன்னிய மோகத்தில் நமது கலாச்சார ரீதியான வாழ்க்கையை இழந்துக் கொண்டிருக்கிறோம். அன்று நம் நாட்டினர் வாழ்ந்த இயற்கையோடியைந்த வாழ்க்கையையும் உணவே மருந்து என்ற பழக்கத்தையும் தொலைத்துவிட்டு, பலவகையான உடல்நலம் மற்றும் வாழ்க்கைக் குறைகளையும் வைத்துக் கொண்டுத் தவிக்கும் நிலையை அடைந்திருக்கிறோம். வெளிநாட்டினரே நம்முடைய யோகா, உணவே மருந்து முறைகளை எண்ணி வியந்து வரும் வேளையில் நாம் அதையெல்லாம் தொலைத்துவிட்டிருக்கிறோம்.</p>
<p>இதேபோன்று, வயதானவர்களின் அனுபவங்களையும், அவர்களின் ஆலோசனைகளையும் ஏற்கும் மனநிலை அற்ற நிலையில் அவர்களை உதாசீனப் படுத்திவருகிறோம்.</p>
<p>வயதானவர்கள் பூமிக்குப் பாரம் என்று கூறி அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு பின்பு உண்மையை உணர்ந்து மனம் வருந்திய மன்னனின் கதைகளைப் படித்திருந்தாலும், அந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் மனநிலை இன்றி வாழ்ந்து வருகிறோம்.</p>
<p>ஆனால் மாறிவரும் சூழ்நிலைகளில் ஆண்களும் பெண்களும் பணத்தைக் குறிவைத்து தங்களது வாழ்க்கையோடில்லாமல் அடுத்தத் தலைமுறைகளின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி வருகிறார்கள். இத்தகைய சூழலில் சென்றத் தலைமுறையினரைப் பற்றிய நினைவு ஏற்படுமா? யோசிக்கத் தக்க விஷயம்தான்.</p>
<p>தற்காலத்திய சூழலில் நகரப்புறங்களில் வாழும் வயதானவர்களாவது, மாறிவரும் கலாச்சார மாற்றங்களுக்கு ஏற்ப தங்களின் வாழ்க்கை சூழல்களை மாற்றிக் கொள்ளத் தலைப்படுகின்றார்கள். ஆனால் கிராமப்புற வாழ் வயதானவர்களின் நிலையை நினைத்தால் கவலை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.</p>
<p>தான் பெற்ற மகனோ மகளோ நகர்ப்புறங்களிலோ, வெளிநாடுகளிலோ வாழ நேரும்போது, வயதானவர்களுக்கு தங்கள் கணவனோ, மனைவியோ தான் துணை. ஆனால் அந்தத் துணையும் தன்னுடன் இல்லாத சூழல் ஏற்படும்போது தனிமை என்பது தவிர்க்க இயலாததாக உள்ளது.</p>
<p>வாழ்வின் இறுதி நாட்களில் துணையை எண்ணி ஏங்கும் நிலை பெண்களை விட ஆண்களுக்கே அதிகமாக ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆண்கள் தன்னுடைய தேவைகள் அனைத்திற்கும் பெரும்பாலும் பெண்களையே சார்ந்து வாழப் பழகியிருப்பதே.</p>
<p>தன் வயதான காலத்தில் தனிமையில் வாழ நேரும் பெண்களுக்கு இந்தக் கவலை ஏற்படாததற்குக் காரணம், வயதான காலத்தில் கணவன் உள்பட தமது உற்றாருக்கு பணிவிடை செய்யாமல் சுதந்திரமாக இருக்க இயலும். தன்னுடைய வாழ்க்கையை தானே அனுபவித்து வாழ முடியும் என்பதே.</p>
<p>ஆனால் எப்போதும் மற்றவர்களைச் சார்ந்திருக்கும் வகையில் வளர்க்கப்படும் ஆண்களின் நிலை- அதிலும் வயோதிக ஆண்களின் நிலை கேள்விக்குறியாகவே மாறிவிடுகின்றது.</p>
<p>இவ்வாறு வயோதிகத்தில் தனிமையில் வாழ வேண்டிய நெருக்கடி ஏற்படும் ஆணின் நிலையைக் குறிப்பிடும் வகையில் வந்துள்ள குறும்படம் தான் பி.எல்.முத்தையா கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள ‘தனிமை’. இரண்டரை நிமிடமே திரையில் ஓடக்கூடிய இந்த குறும்படம் பார்ப்பவர்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் எண்ணிக்கையிலடங்காது.</p>
<p>செட்டிநாடு கலாச்சார அமைப்புள்ள பெரிய வீட்டினுள் தனிமையில் தன்னுடைய வயோதிகத்தைக் கழிக்க நேரும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள சொக்கலிங்கம் செட்டியார் தன்னுடைய பாத்திரத்தை உணர்ந்து செய்துள்ளார்.</p>
<p>கதவு திறக்கிறது. கதவின் தாழ்ப்பாள், வீட்டின் விளக்கு முதலியவை ஆடி அடங்குகிறது. மாத்திரை, மருந்து, மூக்குக்கண்ணாடி முதலியவைக் காட்டப்படுகின்றன. அதைத் தொடர்ந்து வயதான சொக்கலிங்கம் காட்டப்படுகிறார். தொடர்ந்து நகரும் திரை நம்மை அவரின் இளமைக்கால புகைப்படங்கள், மனைவி, சொந்த பந்தங்கள், வாரிகள், நண்பர்கள் ஆகியவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களின்பால் நம்மை இட்டுச் செல்கிறது. சாப்பிடாமல் மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் உணவு, தொடர்ந்து வானத்தை வெறிக்கும் சொக்கலிங்கம் தொலைப்பேசி அழைப்பிற்கு பதில் சொல்லிவிட்டு தன்னுடைய நாற்காலியில் அமர்ந்து பின்பு விட்டத்தை பார்த்துக் கொண்டு படுத்திருக்கும் சொக்கலிங்கம் என்று தனிமையின் ஏக்கத்தை பலவிதங்களில் சொல்லத் தலைப்பட்டிருக்கிறது.</p>
<p>இந்த அளவில் முடிவுறும் இந்தக் குறும்படம் உணர்த்திச் செல்லும் அர்த்தங்கள் ஏராளம். இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று சொன்ன ஒளவை மட்டும், தொடர்ந்து அரசவைகளுக்கு சென்று மன்னர்களை சந்தித்து தன்னை எப்போதும் எல்லோரிடத்திலும் இணைத்துக் கொண்டிருக்காவிட்டால் கொடிது கொடிது ஏகாந்தம் கொடிது என்றே கூறியிருப்பார்.</p>
<p>வாழ்நாள் முழுவதும் தன்னைச் சுற்றி வாழ்ந்து வந்த தன்னுடைய மனைவி மற்றும் சுற்றத்தார் அனைவரும் தன்னைவிட்டு நீங்கிய நிலையில் பழையக் காலங்களை அசைப்போட்டபடி எத்தனை நாட்களைத்தான் கழிப்பது என்ற ஏக்கம் சொக்கலிங்கத்தின் நடிப்பில் எதிரொலிக்கிறது. தனிமையுடன் கூடிய வயோதிகத்தில் நோயும் கூட்டு சேர்ந்தால் நடப்பது என்ன என்பதை சொக்கலிங்கம் நடித்துக் காட்டியுள்ள விதம் கவனத்தில் கொள்ளத் தக்கது.</p>
<p>சொக்கலிங்கத்தின் இளமைக்காலப் புகைப்படத்தைக் காட்டிய இயக்குநர், உடனே தற்போதைய நிலையையும் காட்டியுள்ள விதம் குறித்தற்குரியது. இளமைப் புகைப்படத்தில், அதற்கேயுரிய பெருமிதம் மேலுற தெரியும், அவரின் தற்போதைய நிலையில், ஆற்றாமையும், இயலாமையும் வெளிப்படும் விதத்தில் படமாக்கியுள்ள விதம், சிறிய இடங்களிலும் தன்னுடைய கவனங்களை சிதறவிடாமல் இந்தக் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு சான்று.</p>
<p>வானத்தை வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் சொக்கலிங்கத்தை காட்டியிருப்பது, தனிமைவாழ் வயோதிகரின் நிலையை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.</p>
<p>உணர்வுரீதியான இந்தப் படைப்பை தரமான முறையில் கொடுத்துள்ள இயக்குனருக்கு நல்ல பிரகாசமான எதிர்காலம் உள்ளது.</p>
<p>        -ஸ்ரீபா</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/sreepa.wordpress.com/10/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/sreepa.wordpress.com/10/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sreepa.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sreepa.wordpress.com/10/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sreepa.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sreepa.wordpress.com/10/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sreepa.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sreepa.wordpress.com/10/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sreepa.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sreepa.wordpress.com/10/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sreepa.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sreepa.wordpress.com/10/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sreepa.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sreepa.wordpress.com/10/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sreepa.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sreepa.wordpress.com/10/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=10&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sreepa.wordpress.com/2007/12/01/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/17f23ed926605548fd21a540d3e60f1d?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">preciousdeepa</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கனவுகள் மெய்ப்படும் காலம்&#8230;.</title>
		<link>http://sreepa.wordpress.com/2007/12/01/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae/</link>
		<comments>http://sreepa.wordpress.com/2007/12/01/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae/#comments</comments>
		<pubDate>Sat, 01 Dec 2007 13:17:19 +0000</pubDate>
		<dc:creator>preciousdeepa</dc:creator>
				<category><![CDATA[Article]]></category>

		<guid isPermaLink="false">http://sreepa.wordpress.com/2007/12/01/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae/</guid>
		<description><![CDATA[பழமையும் கலாச்சாரமும் நிறைந்துள்ள வரலாற்றைக் கொண்டது தமிழ்நாடு. தமிழ் இலக்கியங்களும் இலக்கிய ஆசிரியர்களும் தொடர்ந்து இந்த மரபை கட்டிக் காத்து வந்துள்ளனர். அந்த வழியில் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் வழக்கில் இருந்த மருமக்கள் வழிச் சமூகத்தில் வாழ்ந்த நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்வியல் நெறிகளையும், மாறிவந்த சமூகத்தில் அவர்களின் வழித்தோன்றல்கள் சந்திக்க நேர்ந்த பிரச்சனைகளையும் ஒரு குடும்பத்தின் கடைசி வாரிசின் வழி சொல்ல முற்பட்டிருக்கிறது இந்த புதினம். அதோடு நின்று விடாமல் இத்தகைய சமூகத்தில் வாழ்ந்த ஒரு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=9&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>பழமையும் கலாச்சாரமும் நிறைந்துள்ள வரலாற்றைக் கொண்டது தமிழ்நாடு. தமிழ் இலக்கியங்களும் இலக்கிய ஆசிரியர்களும் தொடர்ந்து இந்த மரபை கட்டிக் காத்து வந்துள்ளனர். அந்த வழியில் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் வழக்கில் இருந்த மருமக்கள் வழிச் சமூகத்தில் வாழ்ந்த நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்வியல் நெறிகளையும், மாறிவந்த சமூகத்தில் அவர்களின் வழித்தோன்றல்கள் சந்திக்க நேர்ந்த பிரச்சனைகளையும் ஒரு குடும்பத்தின் கடைசி வாரிசின் வழி சொல்ல முற்பட்டிருக்கிறது இந்த புதினம்.</p>
<p>அதோடு நின்று விடாமல் இத்தகைய சமூகத்தில் வாழ்ந்த ஒரு பெண் எவ்வாறு தனக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுபாடுகளையும் தடைகளையும் மீறி பொது வாழ்க்கையில் சாதிக்க முற்படுகிறார் என்பதையும் அவரது வாழ்க்கையோடு இயைந்து கூறியுள்ளது.</p>
<p>உயரிய சிந்தனைகளும் நல்ல பழக்கவழக்கங்களும் சமூக சிந்தனையும் கொண்ட ஒரு தந்தையின் வழிகாட்டுதலில் சகோதர சகோதரிகளுடன் வாழும் ஒரு பெண்ணின் குழந்தைப் பருவத்தையும், உறவுச்சூழலில் அவளுக்குக் கிடைக்கும் அருகாமைகளும், கால மாற்றத்தால் அவளுக்குக் கிடைக்கும் சிறுமைகளும், கதகதப்புக்கு துணைபுரிந்த உறவுகளின் மூலம் அவள் மற்றும் அவளுடைய அன்னை இருவரும் சந்திக்கும் நெருக்கடிகளும், அதை உடைத்தெறிந்துவிட்டு புத்தகங்களின் உதவியால் தன்னுடைய பாதையை பொதுவாழ்க்கைக்கு அர்ப்பணிக்கத் துணியும் அவள், அரசியல் வாழ்வில் சாதனைகள் புரிந்து எவ்வாறு மனதாலும் செயலாலும் உயர்கிறாள் என்ற வாழ்க்கை வரலாற்றை கூறும் கதைக்களத்தைக் கொண்டுள்ளது இப்புதினம்.</p>
<p>“ஓ, என்னைப்போயி அதிகாலைப் பறவை &#8211; அதாவது இங்கிலீஷில் ணிணீக்ஷீறீஹ் தீவீக்ஷீபீ ம்பாங்க &#8211; அப்படிங்கற நீ. ரொம்ப சந்தோஷம்தான்மா எனக்கு. நான் அந்த அதிகாலைப் பறவையாக கூவி விட்டாலும், கொஞ்ச நேரத்திலே எல்லாப் பறவைகளும் முழிச்குக்கும். பொழுது விடியும், அதாவது சமுதாயம் மாறும்&#8230;&#8230;..”</p>
<p>இந்த வரிகளில் சமூகத் தேடல்களைக் கொண்ட இந்தப் பெண், கட்டுப்பாடுகள் நிறைந்த பெண்களின் முன்னேற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைப்பதோடு நில்லாமல் மாதர் சங்கம் அமைப்பதன்மூலம் மொத்த பெண்களின் வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக விளங்க முற்படுகிறார்.</p>
<p>சுதந்திரக் காலகட்டத்தில் இவ்வழி சமூகத்தினரின் வாழ்க்கை மாற்றங்கள் குறித்தச் செய்திகளைக் கூறமுற்படும்போது, எவ்வாறு சொத்துக்கள் மருமகன்களுக்குக் கொடுக்கப்பட்டது என்பனப் போன்ற செய்திகள் ஒப்பீட்டு ஆய்வுக்கு துணை செய்யும்.</p>
<p>கதையின் ஆரம்பத்தில் குழந்தைகளுக்கான கதைகளும் பாடல்களும் கதையில் விரவிக் காணப்பெறுகிறது. குழந்தைகளுக்கே உரிய ஆரவாரங்களையும் அவர்களின் உலகத்தின் தனித்தன்மைகளும் நிறைந்துக் காணப்படுகிறன. அவர்களுக்கான விளையாட்டுகள், அவர்களின் பார்வையில் உறவுகள் முதலியக் கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன. குழந்தைகள் தூங்குவதற்காக கூறுவதாக வரும் இந்தக் கதைகள் நம்மையும் தாலாட்ட தவறவில்லை.</p>
<p>கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பக்கால அரசியல் நுழைவுகள், அதன் கோட்பாடுகள், சிறப்புகள், கேரளாவில் அதன் ஆதிக்கங்கள், அதற்காக அதன் உறுப்பினர்களின் மெனக்கெடல்கள் முதலியவையும், அந்தக் கட்சியின் கோட்பாடுகளைக் கூறும் புத்தகங்கள் குறித்தக் குறிப்பும் படிப்பவர்களை ஈர்க்கும். இரண்டாம் உலகப்போர் குறித்த செய்திகளும், அதன்போது போர் நடந்த இடங்களில் மக்கள் பட்ட துன்பங்களையும் எடுத்துரைப்பது கண்டிப்பாக வரலாற்று மாணவர்களுக்கு துணைபுரியும். நந்தன் போன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எவ்வாறு உதாரணப் புருஷர்களாக வாழ முற்பட்டனர் என்பதும் குறிக்கப்பட்டுள்ளன.</p>
<p>கூடி வாழ்ந்த உறவுகள் எவ்வாறு சொத்துக்காகவும் மற்ற சில காரணங்களுக்காகவும் கசப்புணர்வுகளை வளர்த்துக் கொண்டன என்பதையும், உயர்ந்த குணங்களைக் கொண்ட தந்தைக் கதாப்பாத்திரத்தைக் கூறி அவர்களின் குழந்தைகளின் எதிரிடை நிலையையும் தெளிவிப்பது போன்ற வாழ்க்கைக் குறிப்புகள் உளவியல் ரீதியாக அணுகத் தக்கன.</p>
<p>ஆறு குழந்தைகளுக்குத் தாயாகவும், கணவன் மற்றும் தன் உறவுகளை மட்டுமே தன் வாழ்க்கையென கருதி வாழும் தாய் கதாபாத்திரமும் எண்ணுதற்குரியது. நான்கு சுவர்களுக்குள்ளே தன்னுடைய உலகம் என்று வாழும் இவரது எல்லைகள் விரிகின்றது என்பதும் கதையின் ஊடாக கூறப்பட்டுள்ளன. வாழ்க்கை நெருக்கடிகள் இவரைப் பக்குவப்படுத்தி தன் மகளின் பொதுவாழ்க்கைக்கு ஒப்புதல் அளிக்க வைக்கிறது என்பதும் தன்போக்கிலேயே கதைக்களத்திலேயே வாசகர்கள் தெரிந்து கொள்ளும் வண்ணம் கூறப்பட்டுள்ளது.</p>
<p>“அம்மாவோ &#8211; அப்போதுதான் முதன்முதலாக முட்டையை உடைத்து வெளியே வரும் கோழிக்குஞ்சு அலகை மாத்திரம் வெளியே நீட்டிவிட்டு பின்னர் உள்ளுக்குள் இழுத்துக் கொள்வது போல் உலகைக் கண்டு பயப்படுகிறாள்”</p>
<p>என்பனப் போன்ற வரிகள் இவரின் நிலையைப் பிரதிபலிக்கின்றன. கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து வரும் ஒரு பெண்ணின் சுதந்திரத்திற்கான முதல் முயற்சியையே இவரது நிலை தெளிவிக்கிறது. கூட்டை விட்டு வெளிவரும் கோழிக்குஞ்சை, பெண்ணியம் தேடும் பெண்களுக்கு உவமையாகக் கூறியுள்ளதன் மூலம், சமூகத் தேடல்களை படிப்பவர்களின் பார்வைக்கு இந்தப் புதினம் விட்டுவிடுகின்றது.</p>
<p>விதவை மணங்களைப் பற்றியக் குறிப்புகள், அந்தக் கால கை மருத்துவக் குறிப்புகள் முதலியவையும் இந்தப் புதினத்தில் காணக் கிடைக்கின்றன.</p>
<p>மொத்தத்தில் பெண் என்பவள் ஆக்கும் சக்தியாக மட்டுமல்லாமல், அவளுக்கானத் தேடல்களை நோக்கியப் பயணங்களை எதிர்நோக்குபவளாகவும் உள்ளாள் என்பதை பறைசாற்றுகின்றது இந்தப் புதினம்.</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/sreepa.wordpress.com/9/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/sreepa.wordpress.com/9/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sreepa.wordpress.com/9/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sreepa.wordpress.com/9/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sreepa.wordpress.com/9/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sreepa.wordpress.com/9/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sreepa.wordpress.com/9/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sreepa.wordpress.com/9/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sreepa.wordpress.com/9/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sreepa.wordpress.com/9/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sreepa.wordpress.com/9/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sreepa.wordpress.com/9/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sreepa.wordpress.com/9/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sreepa.wordpress.com/9/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sreepa.wordpress.com/9/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sreepa.wordpress.com/9/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=9&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sreepa.wordpress.com/2007/12/01/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/17f23ed926605548fd21a540d3e60f1d?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">preciousdeepa</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அன்னிய மண்ணில் அநாதைகளாய். . .</title>
		<link>http://sreepa.wordpress.com/2007/11/17/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%af/</link>
		<comments>http://sreepa.wordpress.com/2007/11/17/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%af/#comments</comments>
		<pubDate>Sat, 17 Nov 2007 12:45:05 +0000</pubDate>
		<dc:creator>preciousdeepa</dc:creator>
				<category><![CDATA[Article]]></category>

		<guid isPermaLink="false">http://sreepa.wordpress.com/2007/11/17/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%af/</guid>
		<description><![CDATA[பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு இடஒதுக்கீடு சமஉரிமை என்று பேசிக்கொண்டு இருக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆனாலும் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. அதற்கு சமூக அரசியல் காரணங்களும் துணையாக இருந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் இலங்கைப் பெண்களைப் பற்றி தனியாகக் குறிப்பிடத் தேவையில்லை. அவர்கள் நாட்டில் வாழ வழியின்றி போரும், அரசியல் காழ்ப்புணர்ச்சியும் அவர்களைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. அந்தத் துரத்தல்களிலிருந்து தப்பிக்க அவர்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். பாலியல் பலாத்காரங்களிலும் குண்டு மழையிலும் தப்பித்து அகதிகளாக [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=8&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு இடஒதுக்கீடு சமஉரிமை என்று பேசிக்கொண்டு இருக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆனாலும் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. அதற்கு சமூக அரசியல் காரணங்களும் துணையாக இருந்தவண்ணம் உள்ளது.</p>
<p>இந்நிலையில் இலங்கைப் பெண்களைப் பற்றி தனியாகக் குறிப்பிடத் தேவையில்லை. அவர்கள் நாட்டில் வாழ வழியின்றி போரும், அரசியல் காழ்ப்புணர்ச்சியும் அவர்களைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. அந்தத் துரத்தல்களிலிருந்து தப்பிக்க அவர்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். பாலியல் பலாத்காரங்களிலும் குண்டு மழையிலும் தப்பித்து அகதிகளாக சொந்த இனங்களுக்குள்ளாகவே வாழ்ந்து வரும் அவலம் அவர்களுக்கு இருப்பதை மறுத்தற்கில்லை. அகதிகள் முகாம்களில் அளிக்கப்படும் நிவாரணங்களிலும் பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் உள்ளது.</p>
<p>அண்டை தேசங்களில் அகதிகளாக வாழ விருப்பம் இல்லை. வேலைத் தேடி அயலகங்களுக்கு செல்கிறோம் என்று அவர்கள் செல்ல முற்படும் அவர்கள் சந்திக்கும் துயரங்கள் ஏராளம். படித்தவர்களுக்கு ஓரளவிற்கு நல்லவழி கிடைப்பதுண்டு. ஆனால் படிக்காமல் அரேபிய நாடுகள் போன்றவற்றில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை மிகவும் பரிதாபமாகவே உள்ளது. வறுமை காரணமாக முகம் தெரியாத ஊரில், தனது குடும்பத்தைப் பிரிந்து யாருடைய வழிகாட்டுதலும் இன்றி, அரசின் ஆதரவும் அற்ற நிலையில் அவர்கள் வாழும் நிலை காணப்படுகிறது.</p>
<p>அரேபிய நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் பலவகைகளிலும் துன்புறுத்தப் படுகிறார்கள் என்று அமெரிக்காவிலிருந்து செயல்படும் மனித உரிமைக் கண்காணிப்புக் குழு ஒன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் அவர்களுக்கான உரிமைகளை மீட்டுத் தரத் தவறிவிட்டது என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அரேபிய நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் எவ்வாறெல்லாம் துன்புறுத்தப் படுகிறார்கள் என்று அது 131 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.</p>
<p>அரேபிய நாடுகளில் 6 லட்சத்து 60 ஆயிரம் இலங்கை பெண்கள் வீட்டு வேலைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு நடைமுறையில் உள்ள தொழிலாளர் உரிமை சட்டங்கள் வீட்டு வேலையில் உள்ள தொழிலாளர்களுக்கு செயல்படுத்தப்படுவதில்லை என்று நியூயார்க்கிலிருந்து வெளியிடப்படும் ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.</p>
<p>அங்கு வீட்டு வேலைக்குப் போகும் இலங்கைப் பெண்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு, குறிப்பிட்ட வேலைநேரம், சுதந்திரமான செயல்பாடு ஆகியவை அற்ற சூழ்நிலையே உள்ளது என்று மனித உரிமை கண்காணிப்பின் பெண்கள் உரிமை ஆய்வாளர் ஜெனிபர் டர்னர் தெரிவித்துள்ளார்.</p>
<p>வேலைக்கு வருபவர்களின் பாஸ்போர்ட்டை முதலாளிகள் பிடுங்கி வைத்துக் கொண்டு அவர்களைத் தொடர்ந்து வேலை செய்ய பணிக்கின்றனர். ஒரு சிலர் அவர்களைத் தொடர்ந்து ஒருநாளில் 16 முதல் 21 மணிநேரம் வரை வேலை வாங்குகிறார்கள். சிலரோ பல மாதங்கள் வருடங்கள் வரை அவர்களது சம்பளத்தை பிடித்து வைத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கான சம்பளம் கொடுக்கப்பட்டாலும் ஒப்பந்தத்தில் பேசிய அளவை விட குறைவான சம்பளமே அவர்களுக்குத் தரப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வேலை செய்யும் இடத்தில் சிறை வைக்கப்படுதல், பட்டினிப் போடுதல், உடல் மற்றும் வார்த்தை ரீதியான துன்புறுத்தல்கள் ஆகியவை அவர்கள் மீது பிரயோகிக்கப்படுகிறது என்று மனித உரிமை கண்காணிப்பு தெரிவித்துள்ளது.</p>
<p>மேலும் பாலியல் பலாத்காரங்கள் மற்றும் வன்முறைகளுக்கு ஆட்படுத்தப்படும் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற பலாத்காரங்களில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் கர்ப்படைந்துள்ளனர் என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தடுக்க வேண்டிய சட்ட வழிமுறைகள் அவர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது. வீட்டு வேலை செய்பவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற, அவர்கள் வேலை செய்யும் முதலாளியின் அனுமதி வாங்க வேண்டும் என்ற சவூதியின் சட்டமும் அவர்கள் துன்புறுத்தப்படுவதற்கு ஒரு காரணம் என்று மனித உரிமை கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.</p>
<p>தங்கரசு ஜெயந்தி என்ற இளவயது இலங்கைப் பெண் அவருடைய எஜமானரால் பெரும் இடையூறுக்கு ஆளாகியுள்ளார். அவள் வேலை செய்த வீட்டில் இருந்தவர்கள் தினமும் அவளை அடித்துள்ளனர். இறுதியாக அவர்கள் பிடித்துத் தள்ளியதில் கீழே விழுந்த ஜெயந்திக்கு மணிக்கட்டு உடைந்துள்ளது. கடுமையானத் தாக்குதலுக்கு ஆளான அவரின் முகம் பெருமளவிற்கு வீங்கியுள்ளது. அவருடைய உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. அவருடைய காதில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவளைக் கத்தியால் அவர்கள் வெட்டியுள்ளனர். தினந்தோறும் உதைத்து அவளைக் கட்டிப்போட்டு, அவளுக்கு உணவுத் தர மறுத்துள்ளனர்.</p>
<p>பஹ்ரைனில் வேலைக்கு சென்ற மற்றொருவருக்கு, தினமும் உணவு கொடுக்க மறுத்துள்ளனர். அவர்கள் வீட்டிலுள்ள பூனை சாப்பிட்டு மீதம் வைத்துவிட்டு போன உணவை சாப்பிட இவர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.</p>
<p>பெரும்பாலும் படிக்காத, ஆனால் எண்ணெய் கிணற்றின் வளத்தில் பணக்காரர்களாக உள்ள அரேபிய நாட்டு பெண்கள் மற்றும் ஆண்கள் தான் இத்தகைய கொடுமைகளை நிகழ்த்துகின்றனர். 19 அரேபியர்களுக்கு 1 வேலைப்பெண் என்ற அளவில் அங்கு இலங்கையிலிருந்து வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் இலங்கையை ‘வேலையாட்களின் நாடு’ என்றே அழைக்கின்றனர்.</p>
<p>இலங்கையின் மூதூர் பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண் ரிஷானா நபீக் என்பவர். 19 வயதாகும் இவர் 4 மாதக் குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு தற்போது சவூதி அரேபியாவில் சட்டத்தின் பிடியில் இருக்கிறார்.</p>
<p>இந்தப் பெண் இந்தக் கொலையை செய்ததாகக் குறிப்பிடப்படும் 2005-ல் இவருக்கு வயது 17. அகிய உலக சட்டப்படி இளம் பெண்களை வேலைக்கு அமர்த்துவது, அதிலும் வெளிநாட்டில் வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். இவர், தான் அந்தக் குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் அறிக்கைக் கூறுகிறது. அதற்குக் காரணம் அவருக்குப் புரியாத மொழியில் விசாரிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்தவிதமான சட்ட உதவியும் அளிக்கப்படவில்லை.</p>
<p>இவர் கொன்றதாகக் கூறப்படும் குழந்தை பால் குடிக்கும்போது தொண்டையில் பால் சிக்கி இறந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டு வேலைக்கு என்று அழைத்து செல்லப்பட்ட ரிஷானா வீட்டு வேலைகளுடன் பத்துக் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளும் வேலையும் தனக்கு கொடுக்கப்பட்டதாகவும், தன்னை வேலைக்கு வைத்திருந்த குடும்பத்தினர் தன்னை மிகவும் கொடுமைப் படுத்தியதாகவும் தன்னுடைய குடும்பத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளதாக ரிஷானா குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஆனால் பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தை அதைக் குடிக்க முடியாமல் திணறியபோது அதைத் தடுக்கவே தான் குழந்தையின் கழுத்தைத் தடவியதாக இவர் கூறுகிறார்.</p>
<p>ஒரு 17 வயதுப் பெண்ணுக்கு 4 மாதக் குழந்தையைப் பராமரிக்கும் அளவிற்கு பக்குவம் இருக்குமா என்பது கேள்விக்குறியே. ஆனால் அவர் 10 குழந்தைகளைப் பராமரித்துக் கொண்டிருந்துள்ளார். வயதும் அனுபவமும் இல்லாத ஒரு பெண்ணை அத்தகைய வேலைக்கு அனுப்பி வைத்த ஏஜென்ஸி, அத்தகைய அனுபவ முதிர்வு அற்ற பெண்களை வேலைக்கு வைத்துக் கொண்டவர்கள் மற்றும் இதை அனுமதித்த அரசாங்கம் ஆகியவையே இந்த இடத்தில் குற்றவாளியாக நிற்க வைக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் ரிஷானா குற்றவாளியாக்கப் பட்டுள்ளார்.</p>
<p>தன்னுடைய ஊரில் உள்ள சபீக் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த ரிஷானா, தன் குடும்பத்தின் வறுமை காரணமாக சவூதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். 17 வயதான இவருக்கு 23 வயது என்று பொய்யான ஆவணங்களை உருவாக்கி அவரை அனுப்பி வைத்த ஏஜென்ஸி ஆட்கள் கண்டனத்துக்கு உரியவர்கள். இவ்வாறு வயதை மாற்றி அனுப்பி வைப்பது என்பது இலங்கையில் சாதாரணமாக நடந்து வருகிறது. கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அரசு அந்நிய செலாவணியை ஈட்டுவதற்காக கண்மூடித்தனமாக நடந்துக் கொள்வது வருத்தத்திற்குரியது.</p>
<p>இத்தகைய துன்புறுத்தல்களைத் தடுக்க வேலைக்கு ஆட்களை எடுக்கும் தரகர்கள் மற்றும் அமைப்புகளை இலங்கை அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மனித உரிமைக் கண்காணிப்புக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p>
<p>அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு பெண்களை வேலைக்கு அனுப்புவதற்கான சட்டதிட்டங்களை இலங்கை அரசு கடுமையாக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பல லட்சக்கணக்கான அப்பாவிப் பெண்களைப் பலவிதமான கொடுமைகளிலிருந்து காப்பாற்ற உதவும்.</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/sreepa.wordpress.com/8/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/sreepa.wordpress.com/8/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sreepa.wordpress.com/8/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sreepa.wordpress.com/8/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sreepa.wordpress.com/8/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sreepa.wordpress.com/8/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sreepa.wordpress.com/8/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sreepa.wordpress.com/8/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sreepa.wordpress.com/8/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sreepa.wordpress.com/8/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sreepa.wordpress.com/8/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sreepa.wordpress.com/8/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sreepa.wordpress.com/8/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sreepa.wordpress.com/8/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sreepa.wordpress.com/8/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sreepa.wordpress.com/8/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=8&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sreepa.wordpress.com/2007/11/17/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%af/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/17f23ed926605548fd21a540d3e60f1d?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">preciousdeepa</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>காளியூட்டு</title>
		<link>http://sreepa.wordpress.com/2007/10/30/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/</link>
		<comments>http://sreepa.wordpress.com/2007/10/30/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/#comments</comments>
		<pubDate>Tue, 30 Oct 2007 13:00:00 +0000</pubDate>
		<dc:creator>preciousdeepa</dc:creator>
				<category><![CDATA[Article]]></category>

		<guid isPermaLink="false">http://sreepa.wordpress.com/2007/10/30/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/</guid>
		<description><![CDATA[பழமை மரபு மாறாமல் ஒரு புதினத்தைப் புதிய தளத்தில் தர முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்தப் புதினம். சுதந்திரக் காலக்கட்டத்தினை தனது நடையின் மூலம் இயல்பாக கொண்டுள்ள இந்தப் படைப்பு, அந்த கால மக்களின் வாழ்வியல்களைத் தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறது. சுதந்திரம் அடைவதற்கு முன்பும், அடைந்த பின்புமான ஒரு கிராமத்து மக்களின் இயல்பை கூற முற்பட்டிருப்பது சிறப்பு. “சுதேசமித்திரன் படிக்கப்பட்டு பொருள் சொல்லப்படுகிறது. சுயராச்சியம் வருமா வராதா என்ற தர்க்கம் நடக்கிறது. கூர்ந்து கவனித்தால் அது வேண்டுமா-வேண்டாமா [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=7&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>பழமை மரபு மாறாமல் ஒரு புதினத்தைப் புதிய தளத்தில் தர முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்தப் புதினம். சுதந்திரக் காலக்கட்டத்தினை தனது நடையின் மூலம் இயல்பாக கொண்டுள்ள இந்தப் படைப்பு, அந்த கால மக்களின் வாழ்வியல்களைத் தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறது. சுதந்திரம் அடைவதற்கு முன்பும், அடைந்த பின்புமான ஒரு கிராமத்து மக்களின் இயல்பை கூற முற்பட்டிருப்பது சிறப்பு.</p>
<p>“சுதேசமித்திரன் படிக்கப்பட்டு பொருள் சொல்லப்படுகிறது. சுயராச்சியம் வருமா வராதா என்ற தர்க்கம் நடக்கிறது. கூர்ந்து கவனித்தால் அது வேண்டுமா-வேண்டாமா என்ற திசைகளிலும் மாறிச் செல்லும்”</p>
<p>என்பன போன்ற வரிகள் அந்த காலத்து மக்களிடையே அரசியல் நிலைப்பாடு எவ்வாறு இருந்தது என்ற விவாதங்களுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.</p>
<p>சுதந்திரம் என்றால் என்ன, சுயராச்சியம் என்றால் என்ன என்பன போன்ற உலகியல் ஞானம் குறைந்த ஒரு கிராமத்து மக்களின் வாழ்க்கைநிலைப்பாட்டைக் கூற முற்படும்போது அவர்களின் அரசியல் அறிவை உயர்த்திக் காட்டக் கூடாது என்ற முனைப்புடன் ஆசிரியர் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார். சிறிய இடங்களையும் கவனத்துடன் கையாண்டுள்ளதற்கு இது உதாரணம்.</p>
<p>இதை மற்றொரு இடத்திலும் அழகாக கையாண்டுள்ளார்.</p>
<p>“நாடு சுதந்திரம் பெற்றுவிட்டது என்று தெரிந்தபோதும் கூட தாங்கள் இருந்து கொண்டிருக்கும் பிரதேசம் இப்போது எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ளாத மேலூர் வாசிகள். சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோதுங்கூட தாங்கள் யாருடைய பிரஜைகள் என்பதை ஐயந்திரிபற சொல்ல முடியாத மாந்தர்.”</p>
<p>இத்தகைய வரிகளில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டோர் தவிர்த்து மற்றவர்களின் மனதில் சுதந்திரத்தைப் பற்றிய தாக்கம் எவ்வாறு இருந்தது என்பதை மறைமுகமாக புரிய வைக்க முயன்றுள்ளதைப் பாராட்டவேண்டும்.</p>
<p>வாசிப்பு அனுபவம் என்பது வாசகனை உணர்வு ரீதியான வெளியில் இட்டு செல்லவேண்டும். படைப்பின் காலகட்டத்தை உணர வைக்க வேண்டும். அத்தகைய முயற்சியில் இப்படைப்பு வெற்றிக் கண்டுள்ளது. அந்த கால பழக்க வழக்கங்கள், மனிதர்களின் வெகுளித்தனம், இனவேற்றுமைகள், வட்டார வழக்குகள், சமூக ஏற்றத்தாழ்வுகள், ஆட்சிநிலை, சமயம் சார்ந்த நம்பிக்கைகள் ஆகிய அனைத்தையும் கதைத்தளத்தில் நம்மை உணர வைக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ள நடை இனிமை பயப்பதாக உள்ளது.</p>
<p>சிறுவயதில் ஊரைவிட்டுப் போன சிவதாணு என்பவரின் கதையை எடுத்துக் கொண்டு அதைப் பல்வேறு தளங்களில் விரிவாக்கி கதையின் ஊடாக மேற்கூறிய விஷயங்களைக் கூற முற்பட்டுள்ளது கவனிக்கத் தக்கது.</p>
<p>ஒரு சிறந்த புதினம் என்பது பக்கங்களை கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. வாசகனின் மனத்தில் அது பதிவு செய்யும் காயங்களையும், அழுத்தங்களையும் உள்ளிட்டே படைப்பின் தாக்கம் அமையும். அந்த வகையில் இந்த நாவல் படிப்பவரின் உள்ளத்தில் அழுத்தங்களை பதிவுசெய்வதோடு மட்டுமில்லாமல் வரலாற்று நிகழ்வுகளையும் பதிவு செய்யும்.</p>
<p>இத்தகைய பதிவுகளுடன் சமய நம்பிக்கைகளையும், கூடவே திருவிழா குறித்த நிகழ்வுகளையும் கூற முற்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது. திருவிழாக்களில் இடம்பெறும் வில்லுப்பாட்டுகள் முதலியவற்றைப் பற்றிய பதிவுகளுடன் கூடவே அக்கால கட்டங்களில் இத்தகைய நாட்டுப்புற கலைகளின் ஊடாக எவ்வாறு தேசியம் வளர்க்கப்பட்டது என்பது புரிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு பற்றியப் புரிதல் இல்லாதவர்களுக்கு இது உதவும்.</p>
<p>காளியூட்டு என்பன போன்ற திருவிழாக்களின் காரண காரியங்களையும் பாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுத்த முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பெண் தெய்வ வழிபாடு குறித்த தெளிவையும் கதையின் ஓட்டத்திலேயே கூற முற்பட்டுள்ளதை வரவேற்கலாம்.</p>
<p>“காரணம் எதுவும் இல்லாம &#8211; பிடிபடாம ஆனா தானா தோணி ஒரு அமைதியைக் கொடுக்கிறதைத்தான் கடவுள்னு சொல்லிக்கிட்டு வாரோம்.” &#8211; என்பன போன்ற வரிகளில் சமய நம்பிக்கைகளின் காரணங்கள் தெளிவுப்படுத்தப் பட்டுள்ளன.</p>
<p>அக்கால சொத்து பங்கீடுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. நில உரிமைகள் எவ்வாறு தோன்றியிருக்கும் என்பன குறித்த விளக்கங்கள் வியப்பேற்படுத்துகின்றன. உயிர்ப்பலிகள் எவ்வாறு தாழ்த்தப் பட்டவர்களின் சவக்குழிகளுக்குக் காரணமாக இருந்தது என்பனக் குறித்த விளக்கங்கள் தற்போது நடக்கும் இத்தகைய இழிநிலைகளுடன் ஒப்பு நோக்க வைக்கின்றன.</p>
<p>மொத்தத்தில் பக்கங்களில் வார்த்தைகளை இட்டு நிரப்பும் புதினங்களுக்கு மத்தியில் குறைந்த பக்கங்களில் தரமான புதினத்தைத் தரமுடியும் என்பது இப்படைப்பின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. மரபு மாறாமல் வெளிவந்துள்ள இத்தகைய படைப்புகள் மூலம் தற்காலப் படைப்பாளிகளின் கலாச்சாரத் தேடல்களுக்கு விடை கிட்டும்.</p>
<p>காளியூட்டு<br />
ஆசிரியர்: மா. அரங்கநாதன்<br />
வெளியீடு: காவ்யா<br />
16, 2-வது குறுக்குத் தெரு,<br />
டிரஸ்ட்புரம்,<br />
கோடம்பாக்கம், சென்னை- 600 024.<br />
ஆண்டு: டிசம்பர் 2006.</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/sreepa.wordpress.com/7/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/sreepa.wordpress.com/7/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sreepa.wordpress.com/7/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sreepa.wordpress.com/7/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sreepa.wordpress.com/7/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sreepa.wordpress.com/7/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sreepa.wordpress.com/7/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sreepa.wordpress.com/7/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sreepa.wordpress.com/7/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sreepa.wordpress.com/7/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sreepa.wordpress.com/7/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sreepa.wordpress.com/7/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sreepa.wordpress.com/7/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sreepa.wordpress.com/7/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sreepa.wordpress.com/7/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sreepa.wordpress.com/7/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=7&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sreepa.wordpress.com/2007/10/30/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/17f23ed926605548fd21a540d3e60f1d?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">preciousdeepa</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கொங்கைத்தீ</title>
		<link>http://sreepa.wordpress.com/2007/10/27/%e0%ae%95%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80/</link>
		<comments>http://sreepa.wordpress.com/2007/10/27/%e0%ae%95%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80/#comments</comments>
		<pubDate>Sat, 27 Oct 2007 12:57:07 +0000</pubDate>
		<dc:creator>preciousdeepa</dc:creator>
				<category><![CDATA[Article]]></category>

		<guid isPermaLink="false">http://sreepa.wordpress.com/2007/10/27/%e0%ae%95%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80/</guid>
		<description><![CDATA[பொறுமைக்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் ஒரு பெண்ணுக்குள் இருக்கும் சீற்றம் எத்தகையது, அது எவ்வளவு தூரம் தீவிரமானது என்பதை நிரூபித்தவள் கண்ணகி. தன் கணவன் தன்னை விட்டு நீங்கினாலும் அவனுக்கு அதனால் மகிழ்ச்சி கிடைக்கிறதே என்ற மனநிறைவுடன் அப்பழுக்கில்லா வண்ணம் வாழ்ந்திருந்த கண்ணகி எவ்வாறு தன் கொங்கைத்தீயின் மூலம் ஒரு மாநகரத்தையே எரிக்கும் அளவிற்கு சக்தியும் துணிவும் பெறுகிறாள்? எந்தெந்த சம்பவங்கள் அவளை அதற்குத் தூண்டுகின்றது என்று கூறும் காப்பியம் சிலப்பதிகாரம். இந்தக் காப்பியத்தை நவீனப்படுத்தி, பெண்களின் மனநிலையில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=6&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>பொறுமைக்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் ஒரு பெண்ணுக்குள் இருக்கும் சீற்றம் எத்தகையது, அது எவ்வளவு தூரம் தீவிரமானது என்பதை நிரூபித்தவள் கண்ணகி. தன் கணவன் தன்னை விட்டு நீங்கினாலும் அவனுக்கு அதனால் மகிழ்ச்சி கிடைக்கிறதே என்ற மனநிறைவுடன் அப்பழுக்கில்லா வண்ணம் வாழ்ந்திருந்த கண்ணகி எவ்வாறு தன் கொங்கைத்தீயின் மூலம் ஒரு மாநகரத்தையே எரிக்கும் அளவிற்கு சக்தியும் துணிவும் பெறுகிறாள்? எந்தெந்த சம்பவங்கள் அவளை அதற்குத் தூண்டுகின்றது என்று கூறும் காப்பியம் சிலப்பதிகாரம்.</p>
<p>இந்தக் காப்பியத்தை நவீனப்படுத்தி, பெண்களின் மனநிலையில் கூறமுற்பட்டிருந்தனர், எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி மாணவிகள். வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நாரதகான சபாவில் நடைபெற்ற இந்த நாடக அரங்கேற்றத்தில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இதற்கு எழுத்து வடிவம் கொடுத்திருந்தவர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி. இந்த காப்பிய நாடகத்திற்கு செயல்வடிவம் கொடுத்து இயக்கியவர் கர்ணா பிரசாத். ஏறக்குறைய 1 மாத காலமாக பயிற்சி கொடுத்து இந்த நாடகத்தை அரங்கேற்றியதாக அவர் கூறிய செய்தி, நடித்த அனைவரது நடிப்பாற்றலிலும் வெளிப்பட்டது.</p>
<p>பெண் காளியின் வடிவம். அவளுக்குள்ளிருந்து பிறந்ததே தெய்வப் பாத்திரங்களாக நாம் உருவகப்படுத்தும் கண்ணகி, திரௌபதி, மாதவி போன்றவர்கள் என்ற கருத்தினை நாடகத்தின் ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தியிருந்தது சிறப்பு.</p>
<p>தன்னுடைய வீட்டுக் கடமைகளை ஆற்றிக் கொண்டே அதில் தன் வாழ்வின் முழுமையை காணுமாறு வளர்க்கப்பட்ட பெண், வறியோர்களை போற்ற வேண்டுமானால் தன் கணவன் உடனிருக்க வேண்டுமே என்று கவலையுறும் அளவிற்கு இருக்கும் ஒரு பெண்ணிடம் கலை மிளிரும் அழகுணர்வை வெளிப்படுத்தும் செயல்களை எதிர்பார்த்த கோவலனின் அறியாமை நாடகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>கண்ணகியின் தோழிகள் மற்றும் கோவலன் தோழர்கள் என இரு குழுவினரை வைத்து இரதரப்பு நியாயங்களைப் பேசவைத்திருப்பது நல்ல முயற்சி. கண்ணகியின் தோழி தேவந்தியின் குழுவினர் சூழ்நிலையை பெண்ணிய நோக்கோடு அணுகியிருப்பதும் நல்ல முயற்சி. கோவலன் மாதவியிடம் இருந்து திரும்பி வந்ததும் ‘சிலம்பு உள்ளது கொள்ளுங்கள்’ என்று கூறும் கண்ணகியையும் தன்னுடன் மதுரைக்கு அழைத்து செல்ல வேண்டிய கட்டாயம் என்ன? என்று கேள்வி எழுப்பும் இவர்கள், அதற்கான காரணமாக, கோவலன் எப்போதும் தேடல் உடையவன். அது கலைஞர்களுக்கே உள்ள இயல்பு. அவனுக்கு பூம்புகார் என்ற சிறிய வட்டத்திற்குள் இருந்து சலிப்பாகி விட்டது. அதைவிடுத்து உலகைக் காண விழையும் அவனுக்கு மனைவி கண்ணகியின் கற்பே அரண் என்று கூறியிருப்பது வித்தியாசமான மாற்றுச் சிந்தனை.</p>
<p>கண்ணகியை மதுரைவரை வழிநடத்தும் கவுந்தியடிகள் இவள் போகும் வழியெங்கும் உள்ள காட்டின் அதிர்வைத் தாங்குவாளா என்று கேட்பதும், அதற்கு கண்ணகி வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் பலவிதமான அதிர்வைத் தாங்கியவண்ணம்தான் தான் இருந்ததாகக் கூறுவதும் சமுதாயத்தில் பெண்ணின் நிலையைக் குறிப்பிடுவதாக உள்ளது.</p>
<p>மதுரையில் கணவன் இறந்த விஷயத்தைக் கேள்வி பட்டதும், பூம்புகாரில் தான் கணவன் இருந்தும் கைம்பெண், மதுரையில் கணவன் இறந்ததால் கைம்பெண் என்று கண்ணகிக் கூறுவதாக இடம்பெற்றுள்ள இடங்கள் விவாதங்களுக்கான புதிய தளங்களைத் தோற்றுவிக்கின்றன. மேலும் தான் கைம்பெண்ணாக வாழ மாட்டேன் என்று கண்ணகி சூளுரைப்பதும் கோடிட்டுக் காட்ட வேண்டிய பகுதியாகும்.</p>
<p>மேலும் ‘தன் கணவன் கள்வன்’ என்று பாண்டிய மன்னன் கூறும் இடத்தில், ‘ஆமாம் அவன் கள்வன்தான், கணிகையரின் உள்ளம்கவர் கள்வன்’ என்று கண்ணகி கூறுவதாக வருமிடங்கள் பார்வையாளர்களின் கைத்தட்டலைப் பெற்று விடுகின்றன.</p>
<p>பாண்டியன், கண்ணகி யார் மனிதகுலப்பெண்ணா? பிடாரியா? என்று கேட்கும் இடத்தில்&#8230; ‘ஆம் நான் மனிதகுலப்பெண், தவறுகண்ட இடத்து பிடாரி, கொடுமை கண்டு எழும்போது கொற்றவை&#8230;  அநீதி இழைக்கப்படும் இடத்தில் பத்ரகாளி&#8230;’ என்று கூறும் இடங்களில் எழுத்துவடிவம் கொடுத்த இந்திரா பார்த்தசாரதியின் கைவண்ணம் தெரிகிறது.</p>
<p>இறுதியில், தன் தவறை உணர்ந்த பாண்டியன் இறக்கும் இடத்தில், ‘பெண்மையின் சீற்றத்திற்கு இதுவே முதல் பலி’ என்று கண்ணகி கூறுவதுபோல் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் ஆசிரியர் முன்நிற்கிறார்.</p>
<p>மாதவியாக இரண்டுபேர் களமிறங்கியிருப்பது புதுமை முயற்சி. ‘மாதவியின் கலைக்கு விலையில்லை. ஆனால் அவளுக்கு விலையுண்டு’ என்று கூறுமிடங்களில், தன் விருப்பத்திற்காக கணிகையர் என்ற ஒரு இனத்தையே ஏற்படுத்தி வைத்திருந்த ஆண் சமுதாயத்தின் ஆதிக்கநிலை மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. கோவலன் மாதவியை ‘பொதுஇடத்தில் ஆடக்கூடாது’ என்று கூறுமிடத்திலும் ஆண்சார்பு கொள்கைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.</p>
<p>யானையிடமிருந்து ஒரு முதியவரையும், காவல்பூதத்திடம் பாதிக்கப்பட்ட ஒருவருக்காக போராடும்போது நல்ல பண்பிற்குரியவனாக காட்டப்படும் கோவலன், எவ்வாறு ஆணாதிக்க உணர்வுடன் செயல்பட்டான் என்பதையும் காட்சிக்கு காட்சி நினைவூட்ட நாடகக்குழுவினர் தவறவில்லை. அழகிருந்தும் அதைப்புரிந்துக் கொள்ள இயலாவிடில், அருகிருந்தும் அது வீண் என்று கண்ணகியைப் பார்த்து கோவலன் கூறுவதாக அமைந்திருந்த இடங்கள் சிறப்பு.</p>
<p>இத்தகைய அழகிய சொல்லாடல்களைப் பயன்படுத்திய இந்தரா பார்த்தசாரதியை பாராட்ட வேண்டும். பல இடங்களில் இத்தகைய சொல்லாடல்கள், இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தை நம்கண்முன் நிறுத்துவதாக அமையப் பெற்றுள்ளது.</p>
<p>நடித்தவர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். அதிலும் கோவலன் மற்றும் கண்ணகியாக பாத்திரமேற்றிருந்த மாணவிகள் கவனிக்கத் தக்கவர்கள். மாதவியை அவளுடைய அரங்கேற்றத்தில் அறிமுகம் செய்யும் இடத்தில் ஒரு சிறிய நாட்டிய நிகழ்வையே மேடையேற்றியிருந்த இயக்குனர் கர்ணா பிரசாத் பாராட்டுக்குறியவர்.</p>
<p>காட்சிக்குக் காட்சி மேடைத் தோற்றத்தை மாற்றி அமைத்திருந்ததும் சிறப்பு. யானை போன்றவற்றை காட்சிப் படுத்தியிருந்ததைப் பாராட்டியே தீர வேண்டும். கொற்றவை தெய்வத்தையும், சாமியாடல் முதலியவற்றையும் நம் கண்முன்னே கொண்டுவந்த இயக்குனர் மற்றும் ஒப்பனையாளர் கவனத்திற்குரியவர்கள். கண்ணகி நல்ல நிலையில் இருக்கும்போது ஒரு ஒப்பனையும், அவளே கோவலனால் வறுமைக் கோலம் கொண்டபோது வேறொரு ஒப்பனையும் என்று மாற்றியிருந்தது மற்றும் ஒளியமைப்பு முதலியவையும் மிக அருமையாக மேடையேற்றப்பட்டிருந்தது.</p>
<p>பெண்ணடிமைத்தனத்தை முதன்முதலில் கூறிய குடிமக்கள் காப்பியம் சிலப்பதிகாரம். அதில் பெண்ணியக் கருத்துக்களை, அந்தப் பெண்களின் வலி மற்றும் மனக்குமுறல்களை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தியிருந்தது சிறப்பு. முழுவதும் பெண்களாலேயே அரங்கேற்றப் பட்டிருந்த இதைப்போன்ற  நாடகங்கள் பெண்ணிய வரலாற்றில் முக்கிய இடம் பெறும். கொங்கைத்தீ பல்வேறு தளங்களில் பார்வையாளர்களின் மனதில் தீமூட்டியது.</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/sreepa.wordpress.com/6/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/sreepa.wordpress.com/6/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sreepa.wordpress.com/6/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sreepa.wordpress.com/6/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sreepa.wordpress.com/6/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sreepa.wordpress.com/6/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sreepa.wordpress.com/6/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sreepa.wordpress.com/6/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sreepa.wordpress.com/6/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sreepa.wordpress.com/6/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sreepa.wordpress.com/6/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sreepa.wordpress.com/6/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sreepa.wordpress.com/6/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sreepa.wordpress.com/6/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sreepa.wordpress.com/6/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sreepa.wordpress.com/6/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=6&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sreepa.wordpress.com/2007/10/27/%e0%ae%95%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/17f23ed926605548fd21a540d3e60f1d?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">preciousdeepa</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பிஞ்சு மனம்</title>
		<link>http://sreepa.wordpress.com/2007/10/25/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://sreepa.wordpress.com/2007/10/25/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 25 Oct 2007 09:47:19 +0000</pubDate>
		<dc:creator>preciousdeepa</dc:creator>
				<category><![CDATA[Article]]></category>

		<guid isPermaLink="false">http://sreepa.wordpress.com/2007/10/25/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/</guid>
		<description><![CDATA[குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்படுமா? தாத்தா-பாட்டி ஆகியோரின் மடியில் செல்லம் கொஞ்சிக் கொண்டு அவர்களின் கைகளால் ஊட்டப்படும் உணவினை அவர்களைக் கொஞ்சமாவது சிரமப்படுத்தி விட்டு உண்பது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் கூறும் கதைகளை செவிமடுப்பது, தாய் தந்தையின் வழிகாட்டுதலின்படி நடப்பது, தம்பி-தங்கை அல்லது அண்ணா-அக்கா இவர்களிடம் செல்லச் சண்டையிடுவது, இவையனைத்திற்கும் இடையில் கல்வியிலும் கவனம் செலுத்துவது, விடுமுறை நாட்களில் உறவினர்கள் வீட்டில் இன்பமாக காலம் கழிப்பது இதெல்லாம் தான் சிறிது காலத்திற்கு முன்பு குழந்தைகளின் இயல்பான [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=5&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்படுமா?</p>
<p>தாத்தா-பாட்டி ஆகியோரின் மடியில் செல்லம் கொஞ்சிக் கொண்டு அவர்களின் கைகளால் ஊட்டப்படும் உணவினை அவர்களைக் கொஞ்சமாவது சிரமப்படுத்தி விட்டு உண்பது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் கூறும் கதைகளை செவிமடுப்பது, தாய் தந்தையின் வழிகாட்டுதலின்படி நடப்பது, தம்பி-தங்கை அல்லது அண்ணா-அக்கா இவர்களிடம் செல்லச் சண்டையிடுவது, இவையனைத்திற்கும் இடையில் கல்வியிலும் கவனம் செலுத்துவது, விடுமுறை நாட்களில் உறவினர்கள் வீட்டில் இன்பமாக காலம் கழிப்பது இதெல்லாம் தான் சிறிது காலத்திற்கு முன்பு குழந்தைகளின் இயல்பான வாழ்க்கையாக இருந்தது.</p>
<p>தற்போதைய குழந்தைகளின் நிலையில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. காலையில் அரக்கப்பரக்க தூங்கியும் தூங்காமலும், சாப்பிட்டும் சாப்பிடாமலும் பள்ளிக்கு செல்வது, பள்ளி முடிந்ததும், கிரீச் போன்றவற்றிடம் தஞ்சமடைவது, அதன்பின்பு பாட்டு, கராத்தே, போன்றவற்றில் கவனம் செலுத்துவது, வீட்டிற்கு திரும்பினாலும் தாய்-தந்தையரின் அன்பு போதுமான அளவில் கிடைக்காத நிலையில் ஏங்குவது போன்ற நிலையே உள்ளது. தாய்-தந்தையரின் அன்பு கிடைக்காதது ஒரு நிலை என்றால் வளர்ந்து வரும் சமுதாய மாற்றத்தில் மற்றும் வளர்ச்சியில் சிக்கிக் கொண்டு தாத்தா-பாட்டி ஆகியோர் ஒன்று முதியோர் இல்லங்களில் அடைக்கலமாகின்றனர் இல்லையென்றால் நெடுந்தொடர்களில் அடைக்கலமாகின்றனர். இதனால் இவர்களின் அன்பும் போதிய அளவில் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.</p>
<p>கதை சொல்வது என்பது எத்தகைய நல்ல கலாச்சாரம். குழந்தைகளை மையமாகக் கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சிகளில் கதை சொல்லுதல் பற்றி பல நல்ல முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வீட்டுவெளிகளில் அமர்ந்து கொண்டு தாத்தா-பாட்டியிடம் கதைக்கேட்கும் பாக்கியம் எத்தனை குழந்தைகளுக்கு வாய்த்து விடுகிறது.</p>
<p>தொடர்ந்து பிஞ்சு மனங்களை புண்படுத்தும் விதமாகவே நடந்துவரும் நமது சமுதாயம் சமீபகாலங்களாக கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. பல சமுதாய சீர்கேடுகளில் சிக்கிக் கொண்டு பல திறமைசாலிகளை பிஞ்சிலேயே பறிகொடுத்து வரும் நிலையிலேயே நாம் உள்ளோம். குழந்தைகளுக்கு எதிராக நம் சமுதாயம் செயல்படுத்திவரும் பாலியல் கொடுமைகள், புறக்கணிப்புகள் ஆகியவை கணக்கிலடங்காத வண்ணம் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது.</p>
<p>சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் கொடுமையின் உச்சமாக நடந்தேறியுள்ளது. 4 வயதுக் குழந்தையை அதன் பெற்றோர் நாயுடன் சேர்த்து சங்கிலியில் பிணைத்து விட்டு வேலைக்கு சென்ற கொடுமையைப் பத்திரிகையில் பார்த்தவர்களின் மனம் பதறியது. பசியால் மயக்கமடைந்த நிலையில் இருந்த அந்தக் குழந்தை பத்திரிகை வைக்க வந்த உறவினர் கண்களில் பட்டு மீட்கப் பட்டுள்ளது. அந்தக் குழந்தையின் பெற்றோர் தற்போது நீதியின் பிடியில்&#8230;. அவர்கள் தொடர்ந்து இதை நடத்தி வந்திருந்தது விசாரணையில் வெளிச்சமாக்கப் பட்டுள்ளது. குழந்தை வேறு எங்கேயும் சென்று விடாமல் இருக்கவே தாங்கள் அவ்வாறு செய்ததாக அவர்கள் கூறிய காரணம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.</p>
<p>தற்போதைய சூழலில் ஆண்-பெண் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டியதின் அவசியம் அதிகரித்துள்ளது. ஆயினும் நாயின் பிடியில் குழந்தையை விட்டு செல்ல வேண்டியதன் அவசியம் என்ன? வேறு ஒரு வழிமுறையும் கிடைக்கவில்லையா? என்ற கேள்வியே நமக்கு எழுகிறது.</p>
<p>சில மாதங்களுக்கு முன்னர், வெளிநாட்டில் விடுதியில் தங்கி வாழ்ந்துவந்த பெண் யாருக்கும் தெரியாமல் கழிவறையில் தன்னுடைய குழந்தையைப் பெற்றெடுத்து அதை அங்கேயே கொன்ற செய்தி தாய்மை என்ற வார்த்தையையே கேள்விக்குறியாக்கும் சம்பவமாக அரங்கேறியிருந்தது.</p>
<p>சமுதாயம் வேகமாக வளர்ந்து வரும் இந்த சூழ்நிலையில் தாய்மை, பாசம் இவையெல்லாம் கடைச்சரக்காகக் கூட கிடைப்பது என்பது அரிதான விஷயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தை வளர்ப்பில் இத்தகைய விஷயங்களே கட்டாயத் தேவையாக உள்ளது என்பதை பலவித ஆராய்ச்சிகள் ஒருபக்கம் உரத்துக் கூறிக் கொண்டுதான் இருக்கின்றன.</p>
<p>சமீபத்தில் தீபா ராஜகோபால் என்பவரால் இயக்கப்பட்ட ‘பிஞ்சுமனம்’ என்ற குறும்படம் குறித்து இங்கு பேசுவது உசிதமாகப்படுகிறது. தானே வளர்ச்சியடையாத நிலையில் அடுத்த உடன்பிறப்பின் ஆளுமையை எதிர்கொள்ள இயலாத ஒரு குழந்தையின் மனநிலை இந்தக் குறும்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.</p>
<p>2.18 நிமிடங்கள் மட்டுமே திரையில் ஓடக்கூடிய இந்த குறும்படத்தின் சாராம்சம் இதுதான். 5 வயது இருக்கக்கூடிய காவ்யா ஒரு தாளில் ஓவியம் வரைந்துக் கொண்டிருக்கிறாள். அவளின் அம்மா தனது இரண்டாவது குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவ்யா, மிக விரைவாக ஓவியத்தை முடித்துவிட்டு, ஓடிவந்து அதைத் தன் தாயிடம் காண்பிக்கிறாள். அதை வாங்கி பக்கத்தில் வைக்கும் காவ்யாவின் அம்மா, தொடர்ந்து தன் இரண்டாவது குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். இதைக் கண்ட காவ்யா, வருத்தம் மேலிட தன் அறைக்குச் சென்று கட்டிலில் வருத்தத்துடன் படுத்துக் கொள்கிறாள். அவள் அன்னையுடன் எடுத்துக் கொண்ட போட்டோ, மற்றும் சுவரில் மாட்டப்பட்டுள்ள ஒரு பொம்மை இரண்டும் வருத்தமான அவளின் பார்வையில் படுகின்றது. வாழ்க்கை இத்தனை சோகமயமானதா என்ன? சிறிது நேரத்தில் அவள் வரைந்த காகிதத்துடன் காவ்யாவின் அறைக்கு வரும் அவளுடைய அன்னை அதை பெருமிதத்துடன் சுவரில் ஒட்டுகிறாள். பின்பு தூங்குவதாக பாசாங்கு செய்யும் காவ்யாவின் தலையை வருடி முத்தமிடுகிறாள். அவள் போகும்வரை தூங்குவதாகவே தன்னுடைய பாசாங்கைத் தொடரும் காவ்யாவின் பார்வை தற்போது அதே போட்டோ மற்றும் பொம்மையின் பக்கம் திரும்புகிறது. வாழ்க்கை இவ்வளவு அழகானதா என்ன?</p>
<p>நிமிடப்பொழுதுகளில் இத்தகைய உணர்ச்சிப் போராட்ட மாறுதல்களை படம்பிடிக்க முடியும் என்பதை இயக்குனர் நிரூபித்துள்ளார். இயல்பாகவே அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கும் பிஞ்சு உள்ளங்களின் இயல்பை தன்னுடைய நடிப்பால் விளங்க வைக்கும் காவ்யா கவனிக்கப்பட வேண்டியவர்.</p>
<p>பிஞ்சுமனம் என்ற தலைப்பில் இத்திரைப்படத்தினை இயக்கிய தீபா ராஜகோபால் குழந்தைகளின் மனோபாவத்தினை வெகுத் துல்லியமாக படம்பிடித்துள்ளார்.</p>
<p>வளர்ந்து வரும் சமுதாய மாற்றத்தை மட்டுமே காரணம் கூறிக் கொண்டு நாம் பிஞ்சு உள்ளங்களை கவனிக்கத் தவறி விடுகிறோம். தன் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்ள நினைக்கும் அனைவருமே பெரும்பாலும் குறிப்பிடும் காரணங்களில் ஒன்று, தன்னுடைய குழந்தையின் எதிர்காலம் என்பதே. நிகழ்காலத்தை இருட்டாக்கிவிட்டு எதிர்காலத்திற்கு வெளிச்சத்தை தேடும் குருட்டு மனப்பான்மை நம்முடைய சமுதாயத்தில் விலக்க முடியாத ஒன்றாகி விட்டுள்ளது.</p>
<p>நாம் என்னதான் செய்வது&#8230; வேலை என்று சென்றுவிட்டால் குழந்தைகளைக் கவனிப்பது என்பது இரண்டாம்பட்சமாகி விடுகிறதே.. என்று கவலைப்படுவதை விடுத்து அதற்கான தீர்வுகளை நாம் கையில் எடுத்துக் கொள்வது வருங்கால சந்ததியினருக்கு நலம் பயக்கும்.</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/sreepa.wordpress.com/5/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/sreepa.wordpress.com/5/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sreepa.wordpress.com/5/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sreepa.wordpress.com/5/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sreepa.wordpress.com/5/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sreepa.wordpress.com/5/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sreepa.wordpress.com/5/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sreepa.wordpress.com/5/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sreepa.wordpress.com/5/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sreepa.wordpress.com/5/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sreepa.wordpress.com/5/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sreepa.wordpress.com/5/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sreepa.wordpress.com/5/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sreepa.wordpress.com/5/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sreepa.wordpress.com/5/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sreepa.wordpress.com/5/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sreepa.wordpress.com&amp;blog=1972451&amp;post=5&amp;subd=sreepa&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sreepa.wordpress.com/2007/10/25/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/17f23ed926605548fd21a540d3e60f1d?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">preciousdeepa</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
